FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
இந்தியா

சைக்கிளை எடுத்துச் செல்கிறேன்; மன்னித்து விடுங்கள்: நெஞ்சை உருக்கும் புலம்பெயர் தொழிலாளியின் கடிதம்

ராஜஸ்தான் மாநிலத்தின் பரத்புர் பகுதியில் இருந்து சைக்கிள் ஒன்றை திருடிச் சென்ற புலம்பெயர் தொழிலாளி, அதற்காக மன்னிப்புக் கடிதம் எழுதிவைத்து விட்டுச் சென்றது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Updated On : 16 மே 2020, 2:22 pm IST
பகிர்:


ராஜஸ்தான் மாநிலத்தின் பரத்புர் பகுதியில் இருந்து சைக்கிள் ஒன்றை திருடிச் சென்ற புலம்பெயர் தொழிலாளி, அதற்காக மன்னிப்புக் கடிதம் எழுதிவைத்து விட்டுச் சென்றது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரப் பிரதேச மாநிலம் பரேலியைச் சேர்ந்த புலம்பெயர் தொழிலாளி மொஹம்மது இக்பால், ராஜஸ்தான் மாநிலம் பரத்புரில் பணியாற்றி வந்தார்.

ஊரடங்கு உத்தரவால் லட்சக்கணக்கான புலம்பெயர் தொழிலாளர்களைப் போலவே இவரும் வாழ்வாதாரத்தை இழந்து, சொந்த ஊர் செல்லும் நிலைக்குத் தள்ளப்பட்டார்.

Advertisement

Advertisement

அப்போது, வழியில் ஒரு சைக்கிளை அவர் திருடிச் சென்றுள்ளார். போகும் வழியில் சைக்கிளை எடுத்துச் சென்றாலும், அந்த சைக்கிளின் உரிமையாளருக்கு ஒரு மன்னிப்புக் கடிதத்தையும் அவர் எழுதி வைத்துள்ளார்.

அதில், நான் ஏழைத் தொழிலாளி. உங்கள் சைக்கிளை எடுத்துச் செல்கிறேன். என்னை மன்னித்து விடுங்கள். பரேலி வரை சென்று சேர வேண்டும். என்னிடம் வேறு எந்த வசதியும் இல்லை. என்னுடைய மாற்றுத்திறனாளி குழந்தையை அழைத்துச் செல்வதற்காக உங்கள் சைக்கிளை எடுத்துக் கொள்கிறேன் என்று எழுதி வைத்துச் சென்றுள்ளார்.

சைக்கிள் காணாமல் போன நிலையில், வீட்டைப் பெருக்கும் போது, இந்த மன்னிப்புக் கடிதம் அந்த வீட்டின் உரிமையாளருக்குக் கிடைத்துள்ளது. இது இன்று சமூக வலைத்தளங்களில் வேகமாகப் பரவி வருகிறது.

ஏதுமற்ற நிலையில், வேறு வழியில்லாமல் சைக்கிளை எடுத்துச் சென்றாலும், அதற்காக மன்னிப்புக் கேட்டிருக்கும் ஒரு புலம்பெயர் தொழிலாளியின் நேர்மை பலருக்கும் பிடித்திருக்கிறது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments