FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

திருமலையில் மலைப் பாதையில் 20 மின்சாரப் பேருந்துகள் விரைவில் இயக்கம்: தேவஸ்தானம் நடவடிக்கை

திருமலை மலைப்பாதையில் விரைவில் 20 மின்சாரப் பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக திருப்பதி தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

28 ஜனவரி 2024, 8:54 am IST
திருப்பதி ஏழுமலையான்
பகிர்:

திருப்பதி: திருமலை மலைப்பாதையில் விரைவில் 20 மின்சாரப் பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக திருப்பதி தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

திருமலையில் சுற்றுச்சூழல் மாசு ஏற்படுவதைக் கட்டுப்படுத்த மலைப்பாதையில் மின்சாரப் பேருந்துகளை இயக்க திருப்பதி தேவஸ்தானம் முடிவு செய்தது. இதற்கான ஏற்பாடுகள் கடந்த 3 ஆண்டுகளாக நடைபெற்று வந்தன.

இதற்கான சோதனை ஓட்டம் திருமலை மலைப்பாதையில் நடத்தப்பட்டுள்ளன. இதற்காக திருப்பதியிலும் பேட்டரியை சாா்ஜ் செய்யும் மையம் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

முதல்முறையாக மலைப்பாதையில் 20 மின்சாரப் பேருந்துகளும், பாபவிநாசம் மாா்க்கத்தில் 8 பேருந்துகளும் இயக்கப்பட உள்ளன.

கரோனா தொற்று தடுப்பு பகுதி நேர ஊரடங்கு ரத்து செய்யப்பட்டவுடன் மின்சாரப் பேருந்துகளை திருமலை மலைப்பாதையில் இயக்க தேவஸ்தானம் திட்டமிட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments