அசாம்: கரோனாவால் 6 லட்சம் பேர் பாதிப்பு
அசாமில் கடந்த ஆண்டிலிருந்து தற்போது வரை கரோனாவால் 6 லட்சம் பேர் பாதிக்கப்பட்டிருப்பதாக அம்மாநில சுகாதாரத் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
அசாமில் கடந்த ஆண்டிலிருந்து தற்போது வரை கரோனாவால் 6 லட்சம் பேர் பாதிக்கப்பட்டிருப்பதாக அம்மாநில சுகாதாரத் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
கரோனாவின் தீவிரம் பல்வேறு நாடுகளிலும் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் இந்தியாவில் இதுவரை 3.45 கோடி லட்சம் பேர் தொற்றால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள் .
நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களிலும் பெரிய பாதிப்பை ஏற்படுத்திய கரோனாவால் அசாமில் இதுவரை 6 லட்சம் பேர் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள்.
Advertisement
Advertisement
இதையும் படிக்க | இந்தியாவிலிருந்து நேரடி விமானச் சேவைக்கு கனடா அனுமதி
சனிக்கிழமை (செப்-25) நிலவரப்படி புதிதாக 325 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டதைத் தொடர்ந்து அசாமில் கரோனா பாதிப்பு 6,00,425 ஆக உயர்ந்திருக்கிறது. இதுவரை தொற்றால் பலியானவர்கள் எண்ணிக்கை 5,838 ஆகவும் பதிவாகியிருக்கிறது.
மேலும் அசாமில் 2.33 கோடி தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.