FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
இந்தியா

யுகாதி: ஆந்திர, தெலங்கானா ஆளுநர்கள், முதல்வர்கள் வாழ்த்து

யுகாதி திருநாளையொட்டி, தெலுங்கு தேச ஆளுநர்கள் மற்றும் முதல்வர்கள் மக்களுக்கு யுகாதி வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளனர்.

Updated On : 2 ஏப்ரல் 2022, 11:54 am IST
பகிர்:

பாரம்பரிய சைத்ரா மாதத்தின் முதல் நாளிலிருந்து தொடங்கும் புத்தாண்டைக் குறிக்கும் யுகாதியை இரு தெலுங்கு மாநிலங்களிலும் உள்ள மக்கள் உற்சாகத்துடனும் கொண்டாடி வருகின்றனர். 

யுகாதி திருநாளையொட்டி, தெலுங்கு தேச ஆளுநர்கள் மற்றும் முதல்வர்கள் மக்களுக்கு யுகாதி வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளனர்.

அவர்கள் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், 

Advertisement

Advertisement

ஆந்திர ஆளுநர் பிஸ்வபூசன் ஹரிசந்தன் தனது டிவிட்டர் பக்கத்தில் தெலுங்கு மக்களுக்கு யுகாதி வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.

ஸ்ரீ சுபக்ருது நாம "யுகாதி" இந்த மகிழ்ச்சியான மற்றும் மங்களகரமான தருணத்தில், தெலுங்கு புத்தாண்டு தினத்தில், ஆந்திரப் பிரதேச மக்களுக்கும், உலகம் முழுவதும் வாழும் தெலுங்கு மக்களுக்கும் எனது மனமார்ந்த நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன் என்று அவர் தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். 

தெலங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் வெளியிட்டுள்ள செய்தியில், 

தெலுங்கு புத்தாண்டு தினமான இன்று தெலங்கானா மக்களுக்கும், உலகம் முழுவதும் உள்ள தெலுங்கு மக்களுக்கும் எனது அன்பான நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

தெலங்கானா மற்றும் ஆந்திரப் பிரதேச முதல்வர்கள் கே.சந்திரசேகர் ராவ் மற்றும் ஒய்எஸ் ஜெகன் மோகன் ரெட்டி ஆகியோர் தனித்தனி செய்திகளில் மக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

பெயரிலேயே ஐஸ்வர்யத்தை மறைக்கும் 'சுபக்ருத்' ஆண்டு, அனைத்துத் துறைகளிலும் மக்களுக்கு நல்வாழ்வைத் தரும் என்று கே.சி.ஆர் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார். அவர் தனது இல்லமான பிரகதி பவனில் நடைபெற்ற யுகாதி கொண்டாட்டத்தில் பங்கேற்றார்.

ஜெகன் மோகன் ரெட்டி தனது டிவிட்டர் பதிவில், இந்த புத்தாண்டில் அனைவருக்கும் நல்ல ஆரோக்கியம், நீண்ட ஆயுள், ஆரோக்கியம் மற்றும் மகிழ்ச்சியைத் தரட்டும் என்று பதிவிட்டார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments