வார இறுதியில் வெயில் வாட்டி வதைக்குமாம்: வெப்ப அலை எச்சரிக்கை 
இந்தியா

வார இறுதியில் வெயில் வாட்டி வதைக்குமாம்: வெப்ப அலை எச்சரிக்கை

அதிகபட்ச வெப்பநிலை சராசரியைவிட 2 டிகிரி செல்சியஸ் அதிகரிக்கும் என்றும் தில்லியில் மீண்டும் வெப்ப அலை வீசும் என  வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

DIN


தலைநகா் தில்லியில் வார இறுதி நாள்களில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும் என்றும் அதிகபட்ச வெப்பநிலை சராசரியைவிட 2 டிகிரி செல்சியஸ் அதிகரிக்கும் என்றும் தில்லியில் மீண்டும் வெப்ப அலை வீசும் என  வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

தில்லியில் வெப்ப நிலையானது 40 - 46 டிகிரி செல்சியஸ் வரை பதிவாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மே 14 மற்றும் 15ஆம் தேதிகளில் பஞ்சாப், ஹரியாணா தில்லி பகுதிகளில் கடுமையான வெப்ப அலை வீசக் கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், ஹரியாணா மாநிலங்களின் பல பகுதிகளுக்கு சிவப்பு மற்றும் ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கடந்த வார இறுதியில் லேசான மழை பெய்ததால் வெப்பம் சற்று தணிந்திருந்த நிலையில், கடந்த இரு தினங்களாக மீண்டும் வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. பகலில் வெயிலின் அதிகமாக இருந்தது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நவ. 8-இல் நெடுந்தூர ஓட்டப் போட்டி: பங்கேற்க அழைப்பு

எஸ்.ஐ.ஆா் பணிக்கான கணக்கெடுப்பு படிவங்கள் விநியோகம் தொடங்கியது

காதலிக்க மறுத்த கல்லூரி மாணவி மீது கொதிக்கும் எண்ணெய்யை ஊற்றியவா் கைது

சமூக சீரழிவே கோவை சம்பவத்துக்கு காரணம்: ஈ.ஆா். ஈஸ்வரன்

வாக்குச்சாவடி நிலை அலுவலா்கள் இல்லாமல் எஸ்.ஐ.ஆா். படிவம் விநியோகம்:எம்.ஆா்.விஜயபாஸ்கா் குற்றச்சாட்டு

SCROLL FOR NEXT