FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
இந்தியா

ஐரோப்ப நாடுகளைச் சேர்ந்த பணியாளர்கள் தொழிற்சங்கம் அமைத்துக் கொள்ள விப்ரோ அனுமதி!

இந்திய தகவல் தொழில்நுட்ப நிறுவனமான விப்ரோ 13 ஐரோப்பிய நாடுகளைச் சேர்ந்த பணியாளர்கள் தொழிற்சங்கம் அமைத்துக் கொள்ள அனுமதி வழங்கியுள்ளதாக தகவலகள் வெளியாகியுள்ளது.

Updated On : 25 நவம்பர் 2022, 1:14 pm IST
பகிர்:


இந்திய தகவல் தொழில்நுட்ப நிறுவனமான விப்ரோ 13 ஐரோப்பிய நாடுகளைச் சேர்ந்த பணியாளர்கள் தொழிற்சங்கம் அமைத்துக் கொள்ள அனுமதி வழங்கியுள்ளதாக தகவலகள் வெளியாகியுள்ளது. இதையடுத்து ஐரோப்பாவில் தொழிற்சங்கம் அமைத்துக் கொள்ள அனுமதி வழங்கியுள்ள முதல் இந்திய தகவல் தொழில்நுட்ப நிறுவனமாக விப்ரோ திகழ்கிறது.

விப்ரோ நிறுவனத்தில் இந்த ஒப்புதலால் பிரான்ஸ், சுவீடன், பின்லாந்து, ஜெர்மனி உள்ளிட்ட 13 ஐரோப்பிய நாடுகளில் உள்ள ஊழியர்கள் சங்கம் அமைத்துக் கொள்ளும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. 

2019 ஆம் ஆண்டில் பணியாளர்களின் கோரிக்கையைத் தொடர்ந்து ஐரோப்பிய நாடுகளைச் பணியாளர்கள் தொழிற்சங்கம் சங்கம் அமைக்க நிறுவனம் ஒப்புக்கொண்டது. இந்த தொழிற்சங்கம் பணியாளர்களை பாதிக்கும் பிரச்னைகள், பணிகள் குறித்து விவாதங்கள் மற்றும் விவாதங்களை நடத்த அனுமதிக்கிறது.

Advertisement

Advertisement

அறிக்கைகளின்படி, விப்ரோவில் ஐரோப்பிய நாடுகளைச் சேர்ந்த 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பணியாளர்கள் பணிபுரிந்து வருகின்றன. இந்த தொழிற்சங்கமானது தேர்ந்தெடுக்கப்பட்ட அல்லது நியமிக்கப்பட்ட பிரதிநிதிகளை கொண்டு செயல்படும்.

இந்த தொழிற்சங்கத்தின் முக்கிய நோக்கம், அனைத்து நாடுகளின் பணியாளர்களுடன் நீடித்த பணி உறவை உருவாக்குவது, நாடு கடந்த நலன் சார்ந்த விஷயங்களைப் பகிர்ந்துகொள்ளவதும் மற்றும் விவாதிப்பது என விப்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது. 

மேலும், தொழிற்சங்கத்தின் முதல் கூட்டம் 2024 நிதியாண்டின் முதல் காலாண்டில் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கூட்டத்தில் தொழிற்சங்கத்தின் தலைவர் மற்றும் தேர்வுக்குழு உறுப்பினர்களை தேர்ந்தெடுத்து விப்ரோவுக்குத் தெரிவிக்கும். பின்னர் தொழிற்சங்க தலைவர் மற்றும் தேர்வுக்குழு உறுப்பினர்களை தேர்ந்தெடுக்கும்.  விப்ரோ பணியாளர்களிடம் வணிக முன்னேற்றம் குறித்து ஆலோசனை நடத்தப்படும். 

தற்போதுள்ள தேசிய சட்டம் மற்றும் நடைமுறைக்கு ஏற்ப ஐரோப்பிய யூனியன் மற்றும் ஐரோப்பிய பொருளாதார பகுதி ஆகியவற்றிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட அல்லது நியமிக்கப்பட்ட பணியாளர் பிரதிநிதிகளால் தொழிற்சங்கம் வழிநடத்தப்படும் என்றும் விப்ரோ தெரிவித்துள்ளது. 

முந்தைய அறிக்கைகளின்படி, செப்டம்பரில், ஐரோப்பாவில் உள்ள திறமையின்மையை நிவர்த்தி செய்வதற்காக மறுசீரமைப்புக் கட்டணமாக ரூ.136 கோடியை விப்ரோ நிறுவனம் செலுத்தியது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments