FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
இந்தியா

நாட்டின் ஒரு பக்கம் கனமழை; மறுபக்கம் வெப்ப அலை: வானிலை ஆய்வு மையம்

நாட்டின் வடகிழக்கு மாநிலங்களில் அடுத்த ஐந்து நாள்களுக்கு கனமழை பெய்யும் என்றும், நாட்டின் இதர பகுதிகளில் அனல் கொளுத்தும் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Updated On : 1 ஏப்ரல் 2022, 6:13 pm IST
நாட்டின் ஒரு பக்கம் கனமழை; மறுபக்கம் அனல் கொளுத்தும்
பகிர்:


புது தில்லி: நாட்டின் வடகிழக்கு மாநிலங்களில் அடுத்த ஐந்து நாள்களுக்கு கனமழை பெய்யும் என்றும், நாட்டின் இதர பகுதிகளில் அனல் கொளுத்தும் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வடகிழக்கு மாநிலங்களாக அசாம், மேகாலயம், அருணாசலம், நாகாலாந்து, மணிப்பூர், சிக்கிம், மேற்கு வங்கத்தின் ஒரு பகுதிகளில் அடுத்த ஐந்து நாள்களில் கனமழை பெய்யும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அதாவது, அசாம், மேகாலயம், அருணாசலப் பிரதேசத்தின் ஒரு சில பகுதிகளில் அடுத்த ஐந்து நாள்களுக்கு கனமழை பெய்யும்; நாகாலாந்து, மணிப்பூர் பகுதிகளில் ஏப்ரல் 1ஆம் தேதியும், மேற்கு வங்கத்தின் ஒரு சில பகுதிகளிலும், சிக்கிமிலும் ஞாயிறு மற்றும் திங்களன்று கனமழை பெய்யக் கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

இதுபோல, இமாசலம், தெற்கு ஹரியானா, தில்லி, தென்மேற்கு உ.பி., குஜராத், மகாராஷ்டிரம், சத்தீஸ்கர், ஜார்க்கண்ட் உள்ளிட்ட மாநிலங்களில் இன்றும் நாளையும் வெப்ப அலை வீசக்கூடும் என்று எச்சரித்துள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments