முகப்பு
இந்தியா

அரசு மானியங்கள் மற்றும் சேவைகளைப் பெற இனி ஆதார் எண் கட்டாயம்!

மத்திய மற்றும் மாநில அரசுகளின் மானியங்கள் மற்றும் சேவைகளைப் பெறுவதற்கு இனி ஆதார் எண் கட்டாயம் என இந்திய தனித்துவ அடையாள ஆணையம் அறிவித்துள்ளது. 

Updated On : 17 ஆகஸ்ட் 2022, 8:22 am IST
பகிர்:


மத்திய மற்றும் மாநில அரசுகளின் மானியங்கள் மற்றும் சேவைகளைப் பெறுவதற்கு இனி ஆதார் எண் கட்டாயம் என இந்திய தனித்துவ அடையாள ஆணையம் அறிவித்துள்ளது. 

அரசு வழங்கும் மானியங்கள் மற்றும் சலுகைகளைப் பெறுபவர்களுக்கு ஆதார் விதிகளை கடுமையாக்கும் வகையில் இந்திய தனித்துவ அடையாள ஆணையம்  மத்திய அமைச்சகங்கள் மற்றும் மாநில அரசுகளுக்கு ஆகஸ்ட் 11 ஆம் தேதி ஒரு சுற்றறிக்கையை அனுப்பியது. 

அந்த சுற்றறிக்கையின்படி, மத்திய மற்றும் மாநில அரசின் திட்டங்களின் கீழ் மானியங்கள் மற்றும் சேவைகளைப் பெறுவதற்கு இனி ஆதார் எண் கட்டாயம் என்றும், ஆதார் வழங்கப்படாத சூழலில், நிரந்தர ஆதார் அட்டை பெரும்வரை ஆதார் பதிவு செய்த எண்ணைப் பயன்படுத்து சேவைகளைப் பெறலாம். ஆதார் எண் அல்லது பதிவுச் சீட்டு இல்லையென்றால், அரசாங்க மானியங்கள் மற்றும் பலன்களைப் பெற முடியாது.
 
நாட்டில் 99 சதவீதத்திற்கும் அதிகமானோருக்கு தற்போது ஆதார் எண் வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.