FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
இந்தியா

காங்கிரஸிலிருந்து விலகினார் குலாம் நபி ஆசாத்!

காங்கிரஸ் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத் அக்கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். 

Updated On : 26 ஆகஸ்ட் 2022, 1:02 pm IST
பகிர்:

காங்கிரஸ் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத், அக்கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். 

காங்கிரஸ் கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் அவர் விலகுவதாகத் தெரிவித்துள்ளார். 

காங்கிரஸ் கட்சியின் மாநிலங்களவைக் குழுத் தலைவர், மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஆகிய பொறுப்புகளை வகித்த குலாம் நபி ஆசாத் ஜம்மு - காஷ்மீர் முன்னாள் முதல்வராகவும் இருந்துள்ளார். 

Advertisement

Advertisement

கடந்த 2019 நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் படுதோல்வி அடைந்தது முதலே அக்கட்சியில் இருந்து முக்கிய நிர்வாகிகள் விலகி வருகின்றனர். 

மேலும், இன்னும் ஓரிரு வாரங்களில் காங்கிரஸ் தலைவர் பதவிக்கான தேர்தலும் நடைபெற உள்ள நிலையில், குலாம் நபி ஆசாத் விலகியுள்ளது காங்கிரஸ் கட்சியினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

காங்கிரஸ் கட்சி தலைமையின் மீது அதிருப்தி கொண்ட ஜி-23 தலைவா்களில் குலாம் நபி ஆசாத்தும் ஒருவர். மாநிலங்களவையில் எதிா்க்கட்சித் தலைவராக இருந்த அவருடைய எம்.பி. பதவிக் காலம் நிறைவடைந்த பிறகு அவருக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்படவில்லை, மேலும் ஜம்மு-காஷ்மீா் காங்கிரஸ் பிரசாரக் குழுத் தலைவர் பதவியை குலாம் நபி ஆசாத் ஏற்க மறுத்ததும் குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments