FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

ஜம்மு-காஷ்மீரில் அமைதியைக் குலைக்க முயலும் ராகுல்: மத்திய அமைச்சர் குற்றச்சாட்டு 

ஜம்மு காஷ்மீரில் அமைதியைக் குலைக்க ராகுல்காந்தி முயல்வதாக மத்திய அமைச்சர் அனுராக் தாகுர் குற்றம்சாட்டியுள்ளார். 

1 பிப்ரவரி 2024, 4:42 pm IST
பகிர்:

ஜம்மு காஷ்மீரில் அமைதியைக் குலைக்க ராகுல்காந்தி முயல்வதாக மத்திய அமைச்சர் அனுராக் தாகுர் குற்றம்சாட்டியுள்ளார். 

காங்கிரஸ் முன்னாள் தலைவரும், தற்போதைய நாடாளுமன்ற உறுப்பினருமான ராகுல் காந்தி மேற்கொண்டுவரும் இந்திய ஒற்றுமை பயணம் 100 நாள்களைக் கடந்து தில்லியை அடைந்துள்ளது. 

கடந்த செப்டம்பர் மாதம் தமிழ்நாட்டில் தொடங்கிய இந்த நடைபயணம் கேரளம், ஆந்திரம், தெலங்கானா, கர்நாடகம், மகாராஷ்டிரம், மத்தியப் பிரதேசம், ஹரியாணா உள்ளிட்ட மாநிலங்களைக் கடந்து கடந்த வாரம் தில்லியை அடைந்தது. 100 நாள்களையும் கடந்து நீடித்துவரும் இந்த நடைபயணத்திற்கு பல்வேறு பிரபலங்களும் கலந்து கொண்டு தங்களது ஆதரவினை தெரிவித்து வருகின்றனர். இந்த நடைபயணம் அடுத்த மாதம் ஜம்மு காஷ்மீரில் நிறைவடைகிறது.

இந்நிலையில் ஜம்மு காஷ்மீரில் நிலவி வரும் அமைதியான சூழலை கெடுக்க ராகுல் காந்தி விரும்புகிறாரா? என மத்திய அமைச்சர் அனுராக் தாகுர் கேள்வி எழுப்பியுள்ளார். 

இதுதொடர்பாக பேசிய அவர், “ஜம்மு காஷ்மீரின் ஒவ்வொரு பகுதிக்கும் தற்போது சுற்றுலாப் பயணிகள் வருகை தருகின்றனர். ஆண்டுக்கு 1.6 கோடி பேர் ஜம்மு காஷ்மீருக்கு வருகின்றனர். சட்டப்பிரிவு 370 ரத்து செய்யப்பட்ட பிறகு ஜம்மு காஷ்மீரில் மூவர்ணக் கொடியை பறக்கவிட முடிகிறது. 1992ஆம் ஆண்டு அப்போதைய பாஜக தலைவர் முரளி மனோகர் ஜோஷி, நரேந்திர மோடி ஆகியோர் ஸ்ரீநகரில் மூவர்ணக் கொடியை பறக்கச் செய்தனர்.

காங்கிரஸ் ஆட்சியிலிருந்த அக்காலத்தில் தீவிரவாத அச்சுறுத்தல்கள் இருந்தன. 2011 யாத்திரையில் ஈடுபட்ட பாஜக தலைவர்களை காங்கிரஸ் அரசு கைது செய்து சிறையிலடைத்தது. அமைதியாக உள்ள காஷ்மீரில் ராகுல்காந்தி நடைபயணம் மேற்கொள்வது எதனால்? என அனுராக் தாகுல் குற்றச்சாட்டு சுமத்தியுள்ளார். 

காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தியின் நடைப்பயணத்தில் ஜம்மு - காஷ்மீர் முன்னாள் முதல்வர்கள் உமர் அப்துல்லா, ஃபரூக் அப்துல்லா மற்றும் மெகபூபா முப்தி ஆகியோர் பங்கேற்கவுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments