உ.பி.யில் மாணவியை சரமாரியாக தாக்கிய ஆசிரியர் இடைநீக்கம்!
உத்தரப் பிரதேசத்தில் வீட்டுப்பாடம் முடிக்காத மாணவியை ஆசிரியர் சரமாரியாக அடித்துத் தாக்கியதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
உத்தரப் பிரதேசத்தில் வீட்டுப்பாடம் முடிக்காத மாணவியை ஆசிரியர் சரமாரியாக அடித்துத் தாக்கியதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
தனியார் பள்ளி ஒன்றில் 5-ஆம் வகுப்பு மாணவி, வீட்டுப்பாடம் முடிக்காததால், கன்னம் மற்றும் கைகளில் பலமுறை சரமாரியாகத் தாக்கியுள்ளார்.
இதனால் பலத்த காயமடைந்த மாணவி, தன்னை ஆசிரியர் சரமாரியாக அடித்துவிட்டதாகப் பெற்றோருக்கு தெரியப்படுத்தியுள்ளார்.
பள்ளிக்கு வந்த மாணவியின் தாயார் கன்னங்கள் வீங்கியிருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார்.
இதையடுத்து, சிறுமியின் தாயார் கிருஷ்ணா நகர் காவல் நிலையத்தில் ஆசிரியர் மீது வழக்குப் பதிவு செய்துள்ளார்.
பள்ளி நிர்வாகம் ஆசிரியரை பணி இடைநீக்கம் செய்து, 2 ஆசிரியர்கள் கொண்ட குழுவை அமைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.