கூட்டத்தில் ராகுல் காந்தி, கார்கே, கே.சி.வேணுகோபால் 
இந்தியா

ஜம்மு-காஷ்மீர் மக்களுக்கு மோடி அரசு துரோகம் செய்துள்ளது: மல்லிகார்ஜுன கார்கே

ஜம்மு-காஷ்மீர் மக்களுக்கு மோடி தலைமையிலான பாஜக அரசாங்கம் துரோகம் இழைத்துவிட்டதாக காங்கிரஸ் தலைவர் கார்கே குற்றம் சாட்டினார். 

DIN

ஜம்மு-காஷ்மீர் மக்களுக்கு மோடி தலைமையிலான பாஜக அரசாங்கம் துரோகம் இழைத்துவிட்டதாக காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே குற்றம் சாட்டினார். 

இதுகுறித்து அவர் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட எக்ஸ் சமூக ஊடக பதிவில் கூறியுள்ளதாவது, “வரவிருக்கும் மக்களவைத் தேர்தல் தொடர்பாக ஜம்மு-காஷ்மீர் மற்றும் லடாக் காங்கிரஸ் கட்சித் தலைவர்களுடன் விரிவாக விவாதித்தோம்.

ஜம்மு-காஷ்மீர் மற்றும் லடாக் ஆகியவை இந்தியாவின் பிரிக்க முடியாத பகுதியாகும். ஆனால் கல்வான் தாக்குதலுக்குப் பிறகு நமது தேசியப் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது.

கடந்த சில ஆண்டுகளாக பீர்பாஞ்சலில் அதிகரித்து வரும் பயங்கரவாத தாக்குதல்கள் மற்றும் காஷ்மீரி பண்டிட்டுகளின் கொலைகள் குறித்து நாங்கள் ஆழ்ந்த கவலை கொண்டுள்ளோம்.

ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் யூனியன் பிரதேசங்களுக்கு மீண்டும் முழு மாநில அந்தஸ்து கிடைப்பதை விரைவில் காணலாம். 

லடாக் மக்கள், அரசியலமைப்பின் ஆறாவது அட்டவணையின் கீழ், அப்பகுதியின் பழங்குடியின மக்களுக்குப் பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்று ஒருமித்து கோரிக்கை விடுத்துவருகின்றனர். ஆனால் மோடி அரசு அவர்களை மீண்டும் மீண்டும் ஏமாற்றி வருகிறது.

ஜம்மு & காஷ்மீர் மற்றும் லடாக் மக்கள் மாற்றத்தை விரும்புகிறார்கள் மற்றும் அவர்களின் குரல்கள் கேட்கப்பட வேண்டும் என்று விரும்புகிறார்கள்.” என்று தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

எம்.எம். நரவனே புத்தகத்தில் மோடி, ராஜ்நாத் சிங் அஞ்சும் ஒரு வரி : பிரியங்கா காந்தி பேச்சு

பட்ஜெட் எதிரொலி: சென்செக்ஸ் 944 புள்ளிகளுடனும், நிஃப்டி 263 புள்ளிகளுடன் உயர்ந்து நிறைவு!

தேசிய பாதுகாப்பு குறித்து ராகுல் பேசும்போது சிரித்த காங்கிரஸ் எம்.பி.க்கள்!

அச்சுறுத்தும் பணிநீக்கம்! ஏஐ தொழில்நுட்பம் மட்டுமே காரணமா? பின்னணியில் என்ன நடக்கிறது?

திருப்பரங்குன்றம் வழக்கு: நிபந்தனையற்ற மன்னிப்புக்கேட்ட மதுரை ஆட்சியர்!

SCROLL FOR NEXT