FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

தில்லி பப்ளிக் பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல்!

தில்லியில் உள்ள ஆர்.கே.புரத்தில் உள்ள பப்ளிக் பள்ளி வளாகத்தில் வெடிகுண்டு இருப்பதாக வந்த மின்னஞ்சலைத் தொடர்ந்து அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

2 பிப்ரவரி 2024, 8:29 am IST
பகிர்:

தில்லியில் உள்ள ஆர்.கே.புரத்தில் உள்ள பப்ளிக் பள்ளி வளாகத்தில் வெடிகுண்டு இருப்பதாக வந்த மின்னஞ்சலைத் தொடர்ந்து அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இதையடுத்து பள்ளி நிர்வாகம் போலீஸாருக்கு தகவல் அளித்தனர். வெடிகுண்டு தடுப்புப் பணியாளர்கள் காலை 8 மணியளவில் வளாகத்தில் சோதனை செய்ததில் சந்தேகத்திற்குரிய வகையில் எதுவும் கிடைக்கவில்லை என கல்வி அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

பள்ளியில் இன்று தேர்வு நடத்தத் திட்டமிடப்பட்ட நிலையில், வெடிகுண்டு தடுப்புப் பிரிவினரின் சோதனைக்குப் பிறகு தேர் சுமூகமாக நடந்தாக பள்ளி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

போலி மின்னஞ்சல் தொடர்பாக போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments