முகப்பு
இந்தியா

ஸ்ரீநகரில் குடியரசுத் தலைவர் முர்மு: தியாகிகள் நினைவிடத்தில் அஞ்சலி!

இரண்டு நாள் பயணமாகக் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு ஜம்மு-காஷ்மீருக்கு வருகை தந்துள்ளார். 

Updated On : 11 அக்டோபர், 2023 at 12:19 PM
பகிர்:

இரண்டு நாள் பயணமாகக் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு ஜம்மு-காஷ்மீருக்கு வருகை தந்துள்ளார். 

ஸ்ரீநகரில் உள்ள விமான நிலையத்தில் வந்திறங்கிய முர்முவை, துணைநிலை ஆளுநர் மனோஜ் சின்ஹா வரவேற்பு அளித்தார். 

யூனியன் பிரதேசத்திற்கு முர்முவின் முதல் வருகையின்போது அவருக்கு மரியாதைக்குரிய காவலர் விருது வழங்கப்பட்டது. 

Advertisement

பின்னர், சினார் கார்ப்ஸ் என்று அழைக்கப்படும் ராணுவத்தின் 15வது படைப்பிரிவின் தலைமையகமான பாதாமிபாக் கண்டோன்மென்ட்டுக்குச் சென்று,  அங்குத் தியாகிகள் நினைவிடத்தில் வீரமரணம் அடைந்த வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தினார். 

இதையடுத்து காஷ்மீர் பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழாவில் குடியரசுத் தலைவர் கலந்து கொள்கிறார்.

முர்முவின் வருகையைத் தொடர்ந்து, ஆளுநர் சின்ஹாவின் எக்ஸ் பதிவில், 

குடியரசுத் தலைவர் முர்முவுக்கு ஸ்ரீநகர் விமான நிலையத்தில் அன்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. அவரது வருகையையொட்டி ஸ்ரீநகர் மற்றும் அதைத் சுற்றியுள்ள பகுதிகளில் போலீஸார், மத்திய ரிசர்வ் போலீஸ் படை உள்ளிட்ட பாதுகாப்புப் படையினர் குவிக்கப்பட்டுள்ளனர். 

ட்ரோன்கள், சிசிடிவி கேமராக்கள் போன்ற சாதனங்களின் மூலம் நகரத்தில் விழிப்புணர்வைப் பராமரிக்கப் பயன்படுத்தப்படுகின்றன என்று அவர் பதிவிட்டுள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.