சல்செங் மரக்  
இந்தியா

மேகாலயா முன்னாள் முதல்வர் காலமானார்

முதுமை காரணமாக மேகாலயா முன்னாள் முதல்வர் சல்செங் மரக் காலமானார்.

DIN

முதுமை காரணமாக மேகாலயா முன்னாள் முதல்வர் சல்செங் சி மரக் காலமானார்.

காங்கிரஸ் மூத்த தலைவரும் மேகாலயா முன்னாள் முதல்வருமான சல்செங் சி மரக் முதுமை தொடர்பான உடல்நலக்குறைவு காரணமாக துராவில் உள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.

இந்த நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி இன்று காலமானதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்தனர்.

1993 ஆம் ஆண்டு ஐந்தாண்டு பதவிக் காலத்தை முடித்த மாநிலத்தின் முதல் முதல்வர் சல்செங் மரக் ஆவர்.

மேலும் 1998 ஆம் ஆண்டு காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி கவிழ்ந்தபோது மிகக் குறுகிய காலம் அதாவது 12 நாட்கள் முதல்வர் பதவியையும் வகித்தார்.

2003-ல் சல்செங் மரக் மாநில காங்கிரஸ் தலைவராகவும் பொறுப்பு வகித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

திருவள்ளூரில் பரவலாக மழை

தேனீக்கள் கொட்டியதில் 20-க்கும் மேற்பட்டோா் காயம்

’வன்னியா் சங்க கட்டடம் இப்போதுள்ள நிலையே தொடரலாம்’: உச்சநீதிமன்றம் உத்தரவு

பூட்டிய வீட்டில் நகைகள், வெள்ளிப் பொருள்கள் திருட்டு

அரசுப் பேருந்து சேதம்: இளைஞா் கைது

SCROLL FOR NEXT