FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
இந்தியா

தெலங்கானாவில் சாதிவாரிக் கணக்கெடுப்பு 98% நிறைவு!

சாதிவாரிக் கணக்கெடுப்பு பணிகள் 98 சதவிகிதம் நிறைவுற்றுள்ளன...

Updated On : 15 டிசம்பர் 2024, 8:58 am IST
- PTI
பகிர்:

ஹைதராபாத்: தெலங்கானாவில் சாதிவாரிக் கணக்கெடுப்பு கடந்த மாதம் (நவ. 6) தொடங்கப்பட்டது. இந்த நிலையில், சாதிவாரிக் கணக்கெடுப்பு பணிகள் 98 சதவிகிதம் நிறைவுற்றுள்ளதாக அம்மாநில முதல்வர் ரேவந்த் ரெட்டி தெரிவித்துள்ளார்.

ஹைதராபாத்தில் குருமா சமூக நிகழ்ச்சியொன்றில் அவர் பேசியதாவது, “தெலங்கானாவில் சமுதாய நலப் பரிசோதனையாக இந்த சாதிவாரிக் கணக்கெடுப்பு அமையும்.

இதன்மூலம், திரட்டப்பட்டுள்ள தரவுகள் ஆளும் காங்கிரஸ் அரசால் பஞ்சாயத்து, சட்டப்பேரவை, மக்களவை தேர்தல்களில் குருமா சமூகத்தினரின் மக்கள்தொகைக்கேற்ப அவர்களுக்கான பிரதிநிதித்துவம் அதிகரிக்க வழிவகை செய்யும்” என்றார்.

Advertisement

Advertisement

மேலும், பட்டியலினப் பிரிவில்(எஸ்சி) உள்ள உள்பிரிவுகள் குறித்த விவகாரத்தில் அமைச்சர் என். உத்தம் குமார் ரெட்டி தலைமையில் ஆய்வுக்குழு ஒன்று அமைக்கப்பட்டிருப்பதாகத் தெரிவித்தார். இதன் மூலம், மடிகா சமூகத்திற்கு சமூகநீதி கிடைக்க அரசு உரிய நடவடிக்கைகளை எடுத்து வருகிறது என்றார். அந்த சமூகத்தைச் சேர்ந்தோருக்கு மாநில அரசு நிறுவனங்களில் உயர் பொறுப்புகள் வழங்கப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments