FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
இந்தியா

மன்மோகன் சிங் மறைவு: உலகத் தலைவர்கள் இரங்கல்

முன்னாள் பிரதமா் டாக்டர் மன்மோகன் சிங் மறைவையொட்டி, உலகம் முழுவதும் இருந்து இரங்கல் குவிந்துள்ளது.

Updated On : 27 டிசம்பர் 2024, 10:11 am IST
இந்தியாவுக்கான ரஷிய தூதர் டெனிஸ் அலிபோவ்
பகிர்:

புது தில்லி: முன்னாள் பிரதமா் டாக்டர் மன்மோகன் சிங் மறைவையொட்டி, உலகம் முழுவதும் இருந்து இரங்கல் குவிந்துள்ளது.

மாலத்தீவுகள் மற்றும் ஆப்கானிஸ்தான் உள்ளிட்ட அண்டை நாடுகளின் தலைவர்கள் அவரது மறைவுக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளனர், அவர்களது நாடுகளுடனான அவரது பங்களிப்புகள் மற்றும் அன்பான உறவுகளை நினைவுகூர்ந்துள்ளனர்.

ஆப்கானிஸ்தானின் முன்னாள் அதிபர் ஹமீத் கர்சாய், எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், இந்தியா தனது மிகச்சிறந்த நம்பிக்கைக்குரிய மகன்களில் ஒருவரை இழந்துவிட்டது என்று கூறியுள்ளார். "ஆப்கானிஸ்தான் மக்களின் அசைக்க முடியாத நட்பு மற்றும் நண்பர்" என்று அழைத்த கர்சாய், சிங்கின் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்ததோடு, அவருடைய குடும்பத்தினருக்கும், அரசாங்கத்திற்கும், இந்திய மக்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவரது ஆன்மா நித்திய சாந்தி அடையட்டும்" என்று கர்சாய் கூறியுள்ளார்.

Advertisement

Advertisement

மன்மோகன் சிங்வுடனான புகைப்படத்தையும் பகிரிந்துள்ளார்.

மாலத்தீவின் முன்னாள் அதிபர் மொஹமட் நஷீத், "மன்மோகன் சிங் காலமானதைக் கேட்க மிகவும் வருத்தமாக இருக்கிறது. நான் எப்போதும் அவருடன் இணைந்து பணியாற்றுவதை விரும்பியுள்ளேன், "கருணையுள்ளம் கொண்ட தந்தை " மற்றும் மாலத்தீவின் நல்ல நண்பர்." இழந்துவிட்டோம் என்று கர்சாய் கூறியுள்ளார்.

இந்தியாவுக்கான ரஷிய தூதர் டெனிஸ் அலிபோவ், மன்மோகன் சிங் மறைவு இந்தியாவிற்கும் ரஷியாவிற்கும் ஒரு கடுமையான சோகத்தையும் வருத்தத்தையும் அளிக்கிறது.இருதரப்பு உறவுகளில் டாக்டர் மன்மோகன் சிங்கின் பங்களிப்பு அளவிட முடியாதது. அவரது மென்மையான நடத்தை எப்போதும் சந்தேகத்திற்கு இடமில்லாதது, ஒரு பொருளாதார நிபுணராக அவரது நிபுணத்துவம் மற்றும் அவரது அர்ப்பணிப்பு. இந்தியாவின் முன்னேற்றம் என்று கூறியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments