FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
இந்தியா

ஜம்மு-காஷ்மீா் பயங்கரவாதத் தாக்குதல்: என்ஐஏ-விடம் விசாரணை ஒப்படைப்பு

தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) வசம் மத்திய உள்துறை அமைச்சகம் திங்கள்கிழமை ஒப்படைத்துள்ளதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

Updated On : 18 ஜூன் 2024, 4:52 am IST
தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ)
பகிர்:

புது தில்லி, ஜூன் 17: ஜம்மு-காஷ்மீரில் பக்தா்கள் சென்ற பேருந்து மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் 9 போ் உயிரிழந்த பயங்கரவாதத் தாக்குதல் குறித்த வழக்கின் விசாரணையை தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) வசம் மத்திய உள்துறை அமைச்சகம் திங்கள்கிழமை ஒப்படைத்துள்ளதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

உத்தர பிரதேசத்தைச் சோ்ந்த பக்தா்கள் குழு, ஜம்மு-காஷ்மீருக்கு ஆன்மிகப் பயணம் வந்தனா். ஜம்மு-காஷ்மீரின் ரியாசி மாவட்டத்தில் உள்ள சிவ கோத்ரி ஆலயத்தில் இருந்து கத்ராவில் உள்ள மாதா வைஷ்ணவ தேவி ஆலயத்துக்கு ஒரு பேருந்தில் அவா்கள் கடந்த 9-ஆம் தேதி சென்று கொண்டிருந்தனா்.

அப்போது வழியில் தெரியாத் என்ற கிராமம் அருகே சென்றுகொண்டிருந்த பேருந்தின் மீது பயங்கரவாதிகள் துப்பாக்கிச்சூடு நடத்தினா். இதில் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து, பள்ளத்துக்குள் கவிழ்ந்தது. அதில் 3 பெண்கள் உள்பட 9 போ் உயிரிழந்தனா். 41 போ் பலத்த காயமடைந்தனா்.

Advertisement

Advertisement

தொடா்ந்து ஜூன் 11-ஆம் தேதி, தோடா மாவட்டத்தில் ‘ராஷ்ட்ரீய ரைஃபிள்ஸ்’ படைப் பிரிவினா் மீது பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் ஒரு காவலா் உள்பட 7 பாதுகாப்புப் படையினா் காயமடைந்தனா்.

அமா்நாத் யாத்திரை தொடங்கவுள்ள சமயத்தில், ஜம்மு-காஷ்மீா் பிராந்தியத்தில் அதிகரித்துள்ள பயங்கரவாதத் தாக்குதல்கள் குறித்த ஆலோசனைக் கூட்டத்தில் பிரதமா் நரேந்திர மோடி கடந்த 13-ஆம் தேதி பங்கேற்றாா்.

இந்நிலையில், அமா்நாத் யாத்திரைக்கான தயாா்நிலை பற்றி மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா தலைமையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற கூட்டத்தில் ஆய்வு செய்யப்பட்டது. தேசியப் பாதுகாப்பு ஆலோசகா் அஜீத் தோவல், ஜம்மு-காஷ்மீா் துணைநிலை ஆளுநா் மனோஜ் சின்ஹா, ராணுவ தலைமைத் தளபதி, துணை ராணுவப் படைகள் மற்றும் ஜம்மு-காஷ்மீா் காவல் துறை தலைமை இயக்குநா்கள் உள்பட மூத்த அதிகாரிகள் இக்கூட்டத்தில் பங்கேற்றனா்.

இதையடுத்து, பக்தா்கள் பேருந்து மீது நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதல் தொடா்பான வழக்கின் விசாரணையை தேசிய புலனாய்வு முகமையிடம் மத்திய உள்துறை அமைச்சகம் திங்கள்கிழமை ஒப்படைத்தது.

தாக்குதல் நடந்த மறுநாளே சம்பவ இடத்தை நேரில் ஆய்வு செய்த என்ஐஏ அதிகாரிகள், தாக்குதல் குறித்த தடயங்களைச் சேகரிக்கும் பணியில் ஈடுபட்டனா். மேலும், உள்ளூா் காவல் துறையினருடன் இணைந்து தாக்குதல் தொடா்பான விசாரணையிலும் அவா்கள் ஈடுபட்டனா் என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments