மேற்கு வங்க ரயில் விபத்து: உதவி எண்கள் அறிவிப்பு!
மேற்கு வங்க ரயில் விபத்து சம்பவம் தொடர்பாக கிழக்கு ரயில்வேத் துறை உதவி எண்களை அறிவித்துள்ளது.
மேற்கு வங்க ரயில் விபத்து சம்பவம் தொடர்பாக கிழக்கு ரயில்வேத் துறை உதவி எண்களை அறிவித்துள்ளது.
மேற்கு வங்கத்தின், டார்ஜிலிங் மாவட்டத்தில் உள்ள நியூ ஜல்பைகுரி அருகே கஞ்சன்ஜங்கா விரைவு ரயில் மீது பின்னால் வந்த சரக்கு ரயில் மோதி இன்று (ஜூன் 17) விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் ரயில் பெட்டிகள் பல தடம்புரண்டன. தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்த மீட்புக் குழுவினர் மீட்பு நடவடிக்கையில் ஈடுபடுள்ளனர்.
Advertisement
Advertisement
மேலும், இந்த விபத்தில் 9 பேர் பலியானதாகவும், 20-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாகவும் முதற்கட்ட விசாரணையில் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த விபத்தில் சிக்கியவர்களுக்குத் தேவையான மருத்துவ உதவிகள் கிடைக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
விபத்து தொடர்பான விவரங்களுக்கு கிழக்கு ரயில்வேத் துறையின் கீழ்க்காணும் உதவி எண்களைத் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
உதவி எண்கள் - 033 2350 8794 (bsnl), 033 2383 3326
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.