ஜம்மு-காஷ்மீரில் துப்பாக்கிச்சூடு: பயங்கரவாதி சுட்டுக் கொலை!
பாதுகாப்புப் படையினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் பயங்கரவாதி ஒருவர் சுட்டுக்கொலை..
ஜம்மு-காஷ்மீரின் குப்வாரா மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் பயங்கரவாதி ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
வடக்கு காஷ்மீர் மாவட்டத்தில் உள்ள லோலாப் பகுதியில் உள்ள மார்கி பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாக உளவுத்துறை அளித்த தகவலின் அடிப்படையில் பாதுகாப்புப் படையினர் அந்த பகுதியைச் சுற்றிவளைத்துத் தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டனர்.
இதையும் படிக்க: மகாராஷ்டிர மக்கள் மாற்றத்தை விரும்புகிறார்கள்: சரத் பவார்
இந்த நடவடிக்கையின் விளைவாகப் பயங்கரவாதி ஒருவர் கொல்லப்பட்டனர். துப்பாக்கிச்சூடு நடைபெற்ற இடத்திலிருந்து ஒரு ஏகே ரைபிள், இரண்டு கைக்குண்கள் மற்றும் நான்கு ஏகே ரைபிள் மேகசின்கள் கைப்பற்றப்பட்டதாக அதிகாரிகள் தகவல் தெரிவித்தனர்.
Advertisement
Advertisement
காஷ்மீரின் குப்வாராவில் பயங்கரவாதிகள் பதுங்குவதும், பாதுகாப்புப் படையினர் நடவடிக்கை மேற்கொள்வதும் வாடிக்கையாகி வருகின்றனது என்பது குறிப்பிடத்தக்கது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.