ஜம்மு-காஷ்மீரின் குப்வாரா மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் பயங்கரவாதி ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
வடக்கு காஷ்மீர் மாவட்டத்தில் உள்ள லோலாப் பகுதியில் உள்ள மார்கி பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாக உளவுத்துறை அளித்த தகவலின் அடிப்படையில் பாதுகாப்புப் படையினர் அந்த பகுதியைச் சுற்றிவளைத்துத் தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டனர்.
இந்த நடவடிக்கையின் விளைவாகப் பயங்கரவாதி ஒருவர் கொல்லப்பட்டனர். துப்பாக்கிச்சூடு நடைபெற்ற இடத்திலிருந்து ஒரு ஏகே ரைபிள், இரண்டு கைக்குண்கள் மற்றும் நான்கு ஏகே ரைபிள் மேகசின்கள் கைப்பற்றப்பட்டதாக அதிகாரிகள் தகவல் தெரிவித்தனர்.
காஷ்மீரின் குப்வாராவில் பயங்கரவாதிகள் பதுங்குவதும், பாதுகாப்புப் படையினர் நடவடிக்கை மேற்கொள்வதும் வாடிக்கையாகி வருகின்றனது என்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.