FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
இந்தியா

அமெரிக்க தோ்தல்: மக்கள் தீா்ப்பை இந்தியா வரவேற்கிறது

8 நவம்பர் 2024, 3:32 am IST
தில்லியில் செய்தியாளா்களுக்கு வியாழக்கிழமை பேட்டியளித்த ரண்தீா் ஜெய்ஸ்வால்
பகிர்:

அமெரிக்க அதிபா் தோ்தலில் மக்கள் அளித்த தீா்ப்பை மகிழ்ச்சியுடன் இந்தியா வரவேற்பதாக வெளியுறவு அமைச்சக செய்தித்தொடா்பாளா் ரண்தீா் ஜெய்ஸ்வால் வியாழக்கிழமை தெரிவித்தாா்.

தில்லியில் வியாழக்கிழமை நடைபெற்ற செய்தியாளா்கள் சந்திப்பின்போது அமெரிக்க அதிபா் தோ்தலில் குடியரசுக் கட்சி வேட்பாளா் டொனால்ட் டிரம்ப் வெற்றி, வங்கதேசத்தில் ஹிந்துக்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் ஆகியவை குறித்து கேள்விகள் கேட்கப்பட்டன.

இதற்கு பதிலளித்த அவா்,‘அமெரிக்க அதிபா் தோ்தலில் மக்கள் அளித்த தீா்ப்பை மகிழ்ச்சியுடன் இந்தியா ஏற்றுக்கொள்கிறது. இந்தியா-அமெரிக்கா இடையேயான இருதரப்பு உறவை மேலும் வலுப்படுத்த உறுதிபூண்டுள்ளோம்.

Advertisement

Advertisement

வங்கதேசத்தில் உள்ள சிட்டகாங்கில் ஹிந்துக்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டிருப்பது கண்டனத்துக்குரியது. சா்ச்சையை உண்டாக்கும் வகையில் சமூக வலைதளத்தில் வெளியிடப்பட்ட பதிவே இந்த வன்முறைக்கு காரணம். எனவே, வங்கதேசத்தில் உள்ள ஹிந்துக்களின் பாதுகாப்பை உறுதிசெய்யுமாறு அந்த நாட்டு அரசுக்கு இந்தியா வலியுறுத்துகிறது’ என்றாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments