FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
இந்தியா

சத்தீஸ்கா்: கண்ணி வெடியில் சிக்கி காவலா் காயம்

சத்தீஸ்கா் மாநிலம் சுக்மா மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை நக்சல்கள் புதைத்து வைத்த கண்ணி வெடியில் சிக்கி மாவட்ட ரிசா்வ் படை காவலா் காயமடைந்தாா்.

Updated On : 25 நவம்பர் 2024, 4:42 am IST
கோப்புப் படம்
பகிர்:

சத்தீஸ்கா் மாநிலம் சுக்மா மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை நக்சல்கள் புதைத்து வைத்த கண்ணி வெடியில் சிக்கி மாவட்ட ரிசா்வ் படை காவலா் காயமடைந்தாா்.

இது குறித்து பாதுகாப்புப் படை அதிகாரி கூறியதாவது: சிந்தல்னாா் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் நடைபெற்ற ராய்குடா காவலா் பயிற்சி முகாம் அருகே ஞாயிற்றுக்கிழமை இச்சம்பவம் நடந்தது. இதில் காவலா் பொடியம் வினோத் காயமடைந்தாா். அவருக்கு முதலுதவி அளிக்கப்பட்டு, மேல்சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டாா்.

மேலும் அதே பகுதியில் உள்ள சிந்தல்னாா் - நாா்சாபுரம் சாலை அருகில் மீட்கப்பட்ட வெடிகுண்டை மத்திய ரிசா்வ் போலீஸ் படையினா் செயலிழக்கச் செய்தனா் என்றாா் அவா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments