இந்திய தேர்தல் ஆணையம் 
இந்தியா

மகாராஷ்டிரம், ஜார்கண்ட் தேர்தல் தேதி இன்று அறிவிப்பு!

மகாராஷ்டிரம், ஜார்கண்ட் தேர்தல் தேதி அறிவிப்பு பற்றி...

DIN

மகாராஷ்டிரம், ஜார்கண்ட் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான தேதியை இந்திய தேர்தல் ஆணையம் செவ்வாய்க்கிழமை அறிவிக்கவுள்ளது.

தில்லியில் இன்று பிற்பகல் 3.30 மணிக்கு நடைபெறும் செய்தியாளர்கள் சந்திப்பில், இந்திய தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் வெளியிடுகிறார்.

மகாராஷ்டிரம் மற்றும் ஜார்கண்ட் சட்டப்பேரவைக்கான பதவிக் காலம் விரைவில் முடிவடையவுள்ள நிலையில், அதற்குள் சட்டப்பேரவைத் தேர்தலை நடத்தி முடிக்க வேண்டியது அவசியம்.

மகாராஷ்டிர சட்டப்பேரவையில் மொத்தம் 288 தொகுதிகளும், ஜார்கண்ட் சட்டப்பேரவையில் மொத்தம் 81 தொகுதிகளுக்கும் தேர்தல் நடைபெறவுள்ளது.

மகாராஷ்டிர மாநிலத்தை சிவசேனை(ஷிண்டே), தேசியவாத காங்கிரஸ்(அஜீத் பவார்) மற்றும் பாஜக கூட்டணி ஆட்சி செய்து வருகின்றது. அதேபோல், ஜார்கண்ட் மாநிலத்தை ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா மற்றும் காங்கிரஸ் கூட்டணி ஆட்சி செய்து வருகின்றது.

இதனிடையே, கடந்த சில நாள்களுக்கு முன்பு ஜம்மு - காஷ்மீர் மற்றும் ஹரியாணா மாநிலங்களுக்கான சட்டப்பேரவைத் தேர்தல் நடத்தப்பட்டு முடிவுகள் கடந்த வாரம் அறிவிக்கப்பட்டது.

ஜம்மு - காஷ்மீரில் இந்தியா கூட்டணியும், ஹரியாணாவில் பாஜகவும் ஆட்சியை பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இந்திய கலாசாரம் அவமதிக்கப்பட்டதை இளைஞர்கள் படிக்க வேண்டும்: பியூஷ் கோயல்

மே.வங்கத்தில் தரையிறக்க முடியாமல் திரும்பி வந்த பிரதமர் மோடியின் ஹெலிகாப்டர்!

கம்மின்ஸ் - லயன் அசத்தல்: இங்கிலாந்து வெற்றிபெற 228 ரன்கள் தேவை!

வரைவு வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் இருக்கிறதா?

கடும் பனிமூட்டம்: தில்லியில் 60-க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து!

SCROLL FOR NEXT