முகப்பு
இந்தியா

கோட்சேவைக் கொண்டாடுபவர்கள் நாட்டின் கொள்கைகளை வரையறுக்கக்கூடாது!: ஜெய்ராம் ரமேஷ்

கோட்சேவைக் கொண்டாடுபவர்களை இந்த நாட்டின் கொள்கைகளை வரையறுக்க அனுமதிக்கக்கூடாது என காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் கூறியுள்ளார். 

Updated On : 30 ஜனவரி 2024, 11:08 am IST
ஜெய்ராம் ரமேஷ்
பகிர்:

மகாத்மா காந்தியைக் கொலை செய்த கோட்சேவைக் கொண்டாடுபவர்களை இந்த நாட்டின் கொள்கைகளை வரையறுக்க அனுமதிக்கக்கூடாது என காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் கூறியுள்ளார். 

மகாத்மா காந்தியின் நினைவு நாளான இன்று (ஜன.30) தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டு ஜெய்ராம், 'மகாத்மா காந்தியை தவிர்த்த மற்றும் நிராகரித்தவர்களின் கொள்கைகளுக்கு எதிரான நமது போர் தொடர்கிறது.' எனப் பதிவிட்டுள்ளார். 

'மகாத்மா காந்தி கொல்லப்பட்டிருக்கலாம், ஆனால் அவருடைய அமைதி, மத நல்லிணக்கம், சகோதரத்துவம், அன்பு ஆகியவற்றைக் கொண்டாடும் கோடிக்கணக்கான இந்தியர்கள் இங்கு உள்ளனர்' என முன்னாள் மத்திய அமைச்சரும் மூத்த காங்கிர்ஸ் தலைவருமான பி சிதம்பரம் தெரிவித்துள்ளார்.   

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments