FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
இந்தியா

ஜம்மு-காஷ்மீர் குறித்து தவறான பிரசாரம் செய்கிறது பாகிஸ்தான்!

இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதிதான் ஜம்மு-காஷ்மீர் என ஐ. நாவுக்கான இந்தியாவின் நிரந்தர பிரதிநிதி தெரிவித்துள்ளார்.

Updated On : 19 பிப்ரவரி 2025, 8:35 am IST
பர்வதனேனி ஹரிஷ் - ANI
பகிர்:

இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதிதான் ஜம்மு-காஷ்மீர் என ஐக்கிய நாடுகள் அவைக்கான இந்தியாவின் நிரந்தர பிரதிநிதி பர்வதனேனி ஹரிஷ் மீண்டும் உறுதிபடத் தெரிவித்துள்ளார்.

ஜம்மு-காஷ்மீர், பாகிஸ்தானுக்குச் சொந்தமானது என தவறான பிரசாரத்தை அந்நாட்டு அரசு செய்து வருவதாகவும் இதற்கு கடும் கண்டனங்களை தெரிவித்துக்கொள்வதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

பாகிஸ்தான் வெளியுறவுத் துறை அமைச்சர் இஷாக் தார் ஐக்கிய நாடுகள் அவையில் ஜம்மு - காஷ்மீர் பிரச்னையை எழுப்பியபோது, ஹரிஷ் இதனை தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement

பலதரப்பு பயிற்சி, சீர்திருத்தம் மற்றும் உலகளாவிய நிர்வாகம் குறித்து ஐக்கிய நாடுகள் அவையின் பாதுகாப்பு கவுன்சிலில் நடைபெற்ற விவாதத்தில் இந்தியா சார்பில் கருத்துகள் முன்வைக்கப்பட்டன.

இதில் ஜம்மு - காஷ்மீர் பிரச்னை குறித்து பாகிஸ்தான் முன்வைத்த வாதங்களுக்கு பதில் அளித்து ஹரிஷ் பேசியதாவது,

’’பாகிஸ்தான் துணை பிரதமர் மற்றும் வெளியுறவுத் துறை அமைச்சர் இந்தியாவின் ஒருங்கிணைந்த மற்றும் பிரிக்க முடியாத பகுதிகளை அறிந்துகொள்ள வேண்டும். ஜம்மு - காஷ்மீர் யூனியன் பிரதேசமானது இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதியாக உள்ளது. அது எப்போதும் இந்திய எல்லைக்குட்பட்டதாகவே இருக்கும்.

பாகிஸ்தான் முன்வைக்கும் தவறான பிரசார கருத்துகள் உண்மையை ஒருபோதும் மாற்றிவிடாது. ஜம்மு - காஷ்மீர் மக்கள் கடந்த ஆண்டு வாக்கு செலுத்தி தங்களுக்கான அரசாங்கத்தை தேர்வு செய்துள்ளனர். ஜம்மு - காஷ்மீர் மக்களின் விருப்பம் மற்றும் தேர்வு மிகவும் தெளிவாக உள்ளது. பாகிஸ்தானைப் போல் அல்லாமல், ஜம்மு - காஷ்மீரில் ஜனநாயகம் வலுவாக உள்ளது’’ எனக் குறிப்பிட்டார்.

இதையும் படிக்க | கால்பந்து திடலில் பார்வையாளர்கள் கூடத்தில் வெடித்த பட்டாசு! 30 பேர் படுகாயம்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments