FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
இந்தியா

'இந்தியா கேட்' பெயரை மாற்ற வேண்டும்: பிரதமர் மோடிக்கு கோரிக்கை!

'இந்தியா கேட்' பெயரை 'பாரத மாதா கேட்' என பெயர் மாற்ற வேண்டும் என பிரதமர் மோடிக்கு பாஜக சிறுபான்மையின பிரிவு தலைவர் கடிதம்.

Updated On : 6 ஜனவரி 2025, 5:46 pm IST
- PTI
பகிர்:

'இந்தியா கேட்' பெயரை 'பாரத மாதா கேட்' என பெயர் மாற்ற வேண்டும் என பிரதமர் மோடிக்கு பாஜக சிறுபான்மையின பிரிவு தலைவர் கடிதம் எழுதியுள்ளார்.

தில்லியில் புகழ்பெற்ற இந்தியாவின் நுழைவுவாயில் என்று அழைக்கப்படும் 'இந்தியா கேட்' உள்ளது. இது போர் நினைவுச் சின்னமாக 1931ல் திறக்கப்பட்டது. முதல் உலகப் போரில் உயிர்நீத்த 82,000 வீரர்களின் நினைவாக அமைக்கப்பட்டது. இந்த 'கேட்'டில் 13,300 அதிகாரிகள், வீரர்களின் பெயர் பொறிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இந்தியா கேட் பெயரை மாற்ற வேண்டும் என பாஜக சிறுபான்மையின பிரிவு தலைவர் ஜமால் சித்திக், பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார்.

Advertisement

Advertisement

நாட்டிற்காக உயிர்நீத்த வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக இந்தியா கேட் பெயரை மாற்ற வேண்டும் என்று கூறியுள்ளார் .

இந்தியாவின் சின்னத்துக்கு பாரத மாதாவின் பெயரைச் சூட்டுவது தேசத்தின் சிறப்பான உணர்வை பிரதிபலிக்கும், தங்கள் உயிரை நாட்டிற்காக தியாகம் செய்த வீரர்களுக்கு மரியாதையாகவும் இருக்கும் என்றும் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments