வினாத்தாள் கசிவு விவகாரம்: மௌனம் கலைத்த பிரதமர் மோடிக்கு கர்நாடக முதல்வர் நன்றி
நீட் தேர்வு வினாத்தாள் கசிவு விவகாரத்தில் கர்நாடக முதல்வர் டி.கே. சிவகுமார் பேட்டி....
நீட் தேர்வு வினாத்தாள் கசிவு விவகாரத்தில் மௌனம் கலைத்த பிரதமர் மோடிக்கு கர்நாடக முதல்வர் சிவகுமார் நன்றி தெரிவித்துள்ளார்.
பெங்களூருவில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர், "பிரதமர் இறுதியாக மனம்திறந்து பேசியுள்ளது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது.
சுமார் பதினைந்து நாட்கள் அல்லது ஒரு மாதத்திற்குப் பிறகு அவர் பேசியுள்ளார்.
Advertisement
Advertisement
அதுவே முக்கியமானது. நாம் அனைவரும் நமது குழந்தைகள் மற்றும் இளைஞர்களின் எதிர்காலத்திற்காக உழைக்கிறோம். நாட்டு மக்கள் முன் இப்போதாவது அவர் தனது மௌனத்தைக் கலைத்துள்ளாரே, அவருக்கு என் நன்றிகள்" என்று தெரிவித்துள்ளார்.
வினாத்தாள் கசிவுகளுக்கு எதிராகக் கடுமையான விதிகள் அடங்கிய மசோதா அடுத்த வாரம் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் என்று வியாழக்கிழமை பிரதமர் மோடி அறிவித்திருந்தார்.
இதற்குப் பதிலளிக்கும் விதமாகவே முதல்வர் சிவகுமார் இந்த கருத்துக்களைத் தெரிவித்துள்ளார்.
Karnataka Chief Minister D K Shivakumar on Friday thanked Prime Minister Narendra Modi for finally speaking out on the NEET paper leak issue, while taking a swipe at him for allegedly remaining silent on the matter for so long.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.