பஞ்சாப்: சர்வதேச எல்லை அருகே துப்பாக்கி பாகம் கண்டெடுப்பு
பஞ்சாபின் அமிருதசரஸ் மாவட்டத்தில் சர்வதேச எல்லை அருகே துப்பாக்கியின் அடிப்பாகம், தோட்டா, ஹெராயின் போதைப்பொருள் பொட்டலம் ஆகியவற்றை எல்லைப் பாதுகாப்புப் படையினர் கண்டெடுத்தனர்.
பஞ்சாபின் அமிருதசரஸ் மாவட்டத்தில் சர்வதேச எல்லை அருகே துப்பாக்கியின் அடிப்பாகம், தோட்டா, ஹெராயின் போதைப்பொருள் பொட்டலம் ஆகியவற்றை எல்லைப் பாதுகாப்புப் படையினர் கண்டெடுத்தனர்.
அமிருதசரஸ் மாவட்டத்தில் உள்ள ரோரன்வாலா குர்த் கிராமத்தில் விவசாய நிலையத்தில் துப்பாக்கியின் அடிப்பாகமும், தோட்டாவும் கண்டெடுக்கப்பட்டதாக எல்லைப் பாதுகாப்புப் படை அதிகாரி தெரிவித்தார்.
இதே கிராமத்தில் ஞாயிற்றுக்கிழமை நடத்தப்பட்ட தேடுதல் வேட்டையின்போது 493 கிராம் ஹெராயின் போதைப்பொருள் பொட்டலம் மீட்கப்பட்டதாகவும் அவர் கூறினார். அந்த பொட்டலம் மஞ்சள் நிற டேப்பால் சுற்றி வைக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.