முகப்பு
இந்தியா

டிசம்பர் 15-ல் தெலங்கானாவில் எஸ். பி. பாலசுப்ரமணியம் சிலை திறப்பு

தெலங்கானாவின் கலாச்சார மையமான ரவீந்திர பாரதியில் மறைந்த பின்னணி பாடகர் எஸ். பி. பாலசுப்ரமணியத்தின் சிலையை வரும் டிசம்பர் 15ஆம் தேதி மாநில அரசு திறந்து வைக்கிறது.

Updated On : 29 நவம்பர், 2025 at 1:35 PM
- கோப்புப்படம்.
பகிர்:

தெலங்கானாவின் கலாச்சார மையமான ரவீந்திர பாரதியில் மறைந்த பின்னணி பாடகர் எஸ். பி. பாலசுப்ரமணியம் சிலையை வரும் டிசம்பர் 15ஆம் தேதி மாநில அரசு திறந்து வைக்கிறது.

பாலசுப்ரமணியத்தின் மைத்துனரும் மூத்த நடிகருமான ‘சுபலேக’ சுதாகர் முதல்வர் ரேவந்த் ரெட்டியை சனிக்கிழமை சந்தித்து சிலை திறப்பு விழாவிற்கு முறைப்படி அழைப்பு விடுத்தார்.

அப்போது சிலையை ரவீந்திர பாரதியில் நிறுவ அரசு எடுத்த முடிவுக்கு முதல்வருக்கு அவர் நன்றி தெரிவித்தார்.

முன்னதாக கடந்த நவம்பவர் 27ஆம் தேதி சுதாகருடன் இணைந்து சுற்றுலா அமைச்சர் ஜுபள்ளி கிருஷ்ணா ராவ், ரவீந்திர பாரதிக்கு சென்று சிலை நிறுவுவதற்கான ஏற்பாடுகளை ஆய்வு செய்தார்.

பின்னர் அமைச்சர் வெளியிட்ட ‘எக்ஸ்’ தளப் பதிவில், சிலை திறப்பு ஏற்பாடுகள் தொடர்பாக பல பரிந்துரைகளை அதிகாரிகளுக்கு வழங்கியதாக தெரிவித்தார்.

நேபாளம்: தரையிறங்கும்போது விமானத்தின் மீது பறவை மோதியதால் பரபரப்பு

பிரபல பின்னணிப் பாடகா் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் கடந்த 2020-ஆம் ஆண்டு செப்.25 -ஆம் தேதி கரோனா தொற்றால் உயிரிழந்தாா்.

இதைத் தொடா்ந்து அவரது உடல் பண்ணை வீட்டில் அடக்கம் செய்யப்பட்டது.

summary

The Telangana government will unveil a statue of legendary singer S P Balasubrahmanyam at Ravindra Bharati, the state-run cultural centre, on December 15.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.