புலிக்குட்டிகளுடன் கிராமத்தில் உலவிய பெண் புலியை யானைகள் உதவியுடன் பிடித்த வனத்துறை!
4 குட்டிகளுடன் காட்டிலிருந்து வெளியேறி கிராமத்தில் உலவிய புலி வனத்துறையால் பிடிப்பு
மைசூரு: கர்நாடகத்தில் கிராமத்தில் புலிக்குட்டிகளுடன் உலவிய பெண் புலியை யானைகள் உதவியுடன் வனத்துறையினர் பிடித்தனர்.
ஹன்சூர் வட்டத்திற்குள்பட்ட கௌடனகடே கிராமத்தில் பெண் புலி ஒன்று அதன் குட்டிகளுடன் சுற்றித்திரிவதாக கிராம மக்கள் புகார் அளித்ததனர். கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்னர் இதே பகுதியைச் சேர்ந்த ஒரு சிறுவனை அடித்துக் கொன்ற புலியே இப்போது மீண்டும் அப்பகுதியில் உலவுவதாக கிராம மக்கள் தெரிவிக்கின்றனர். அதன்பேரில், வனத்துறையினர் அந்தப் புலியைத் தீவிரமாகத் தேடி வந்தனர்.
புலியைப் பிடிக்க 4 யானைகள் வரவழைக்கப்பட்டு தேடுதல் பணி தீவிரப்படுத்தப்பட்டிருந்த நிலையில், விளைநிலத்தில் இருந்த புலியை அதிகாரிகள் மயக்க ஊசி செலுத்தி பிடித்தனர். அதன்பின், அந்தப் புலிக்கு உரிய மருத்துவ சிகிச்சையளிக்கப்பட்டு வனத்தில் விடப்பட்டது.
Advertisement
Advertisement
இதனிடையே, அதன் 4 புலிக்குட்டிகளும் ஞாயிற்றுக்கிழமை(நவ. 30) காலையில் மற்றொரு பகுதியிலிருந்து பிடிபட்டன. அந்தக் குட்டிகளும் தாயுடன் சேர்க்கப்பட்டு பாதுகாப்பான வனப்பகுதிக்குள் விடப்பட்டிருப்பதக அதிகாரிகள் தெரிவித்தனர்.
Tigress, four cubs captured on village outskirts in Karnataka's Hunsur
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.