ஜோதிபா புலேவின் 200-வது பிறந்த நாள்: குடியரசுத்தலைவர், பிரதமர் உள்ளிட்டோர் மரியாதை!
நாடாளுமன்ற வளாகத்தில் ஜோதிபா புலேவின் 200-வது பிறந்த நாள் நிகழ்வு...
மகாத்மா ஜோதிபா புலேவின் 200-வது பிறந்த நாளையொட்டி தில்லி நாடாளுமன்ற வளாகத்தில் குடியரசுத்தலைவர் முர்மு, பிரதமர் மோடி உள்ளிட்டோர் மரியாதை செலுத்தினர்.
விடுதலைப் போராட்டக் காலத்தில் இந்தியாவின் சமூக சீர்திருத்தவாதியாக அறியப்படும் மகாத்மா ஜோதிபா புலேவின் 200-வது பிறந்த நாள் இன்று கொண்டாடப்படுகிறது. இவர் 1827 ஏப். 11 அன்று பிறந்தார். இவரது மனைவி சாவித்திரிபாய் புலேவும் சமூக சீர்திருத்தத்தில் முக்கியப் பங்காற்றியவர்.
தில்லியில் மத்திய அரசு சார்பில் நாடாளுமன்ற வளாகத்தில் நடைபெற்ற ஜோதிபா புலேவின் 200-வது பிறந்த நாள் நிகழ்ச்சியில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, குடியரசு துணைத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன், பிரதமர் மோடி, எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா, மத்திய அமைச்சர்கள் பலரும் கலந்துகொண்டனர்.PTI
Advertisement
ஜோதிபா புலேவின் திருவுருவச் சிலைக்கு அனைவரும் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
அப்போது நாடாளுமன்ற வளாகத்தில் பிரதமர் மோடியும் ராகுல் காந்தியும் சிறிது நேரம் பேசிக்கொண்டனர். அதேபோல பாஜக அமைச்சர்களுடனும் ராகுல் காந்தி கலந்துரையாடினார்.