தேர்தல் நடத்தை விதிகளை மீறியுள்ளார் பிரதமர் மோடி: கபில் சிபல் குற்றச்சாட்டு!
நாட்டு மக்களுடனான உரை என்கிற பெயரில் பிரதமர் மோடி தேர்தல் நடத்தை விதிகளை மீறியுள்ளார் என்று எம்.பி. கபில் சிபல் குற்றஞ்சாட்டினார்.
நாட்டு மக்களுடனான உரை என்கிற பெயரில் பிரதமர் மோடி தேர்தல் நடத்தை விதிகளை மீறியுள்ளார் என்று எம்.பி. கபில் சிபல் குற்றஞ்சாட்டினார்.
இதுகுறித்து தில்லியில் சனிக்கிழமை செய்தியாளர்களைச் சந்தித்த அவர், இது இந்திய அரசியலில் ஒரு புதிய வீழ்ச்சி. ஆனால் தலைமைத் தேர்தல் ஆணையரோ அல்லது வேறு எந்த அமைப்போ இது குறித்து எந்த நடவடிக்கையும் எடுக்காது என்பது எனக்குத் தெரியும். தேர்தல் நடக்கும் போது, பிரதமர் மீண்டும் மீண்டும் தேர்தல் நடத்தை விதிகளை மீறி, பிரதமராக இருந்துகொண்டே அரசியல் உரைகளை ஆற்றுகிறார்.
கடந்த காலத்தில் எந்தப் பிரதமரும் இப்படிச் செய்ததில்லை. நீங்கள் தேர்தலில் வெற்றி பெறலாம், ஆனால் அதற்காக ஒரு நிறுவனத்தையே அழித்துவிடக் கூடாது. அரசியல் கட்சியின் தலைவராக காங்கிரஸை பிரதமர் விமர்சிக்கலாம். ஆனால் பிரதமராக அதைச் செய்ய முடியுமா என்பது வேறு கேள்வி. இவ்வாறு குறிப்பிட்டார்.
Advertisement
மகளிா் இடஒதுக்கீட்டை 2029 முதல் அமலாக்குவதுடன், அதற்கு ஏதுவாக மொத்த மக்களவைத் தொகுதிகளின் எண்ணிக்கையை 543-இல் இருந்து அதிகபட்சமாக 850 வரை அதிகரிக்க வகை செய்யும் அரசமைப்புச் சட்டத்தின் 131-ஆவது திருத்த மசோதா-2026 மக்களவையில் கடந்த வெள்ளிக்கிழமை நடத்தப்பட்ட வாக்கெடுப்பில் தோல்வியடைந்தது.
இதையடுத்து சனிக்கிழமை இரவு 8.30 மணியளவில் நாட்டு மக்களுக்கு காணொலி வாயிலாக பிரதமா் நரேந்திர மோடி உரையாற்றினாா். அதில், மக்களவையில் மகளிா் இடஒதுக்கீடு அமல் மசோதாவை தோல்வியடையச் செய்து மகளிரின் அதிகார கனவை காங்கிரஸ், திமுக, திரிணமூல் காங்கிரஸ் உள்ளிட்ட எதிா்க்கட்சிகள் தகா்த்ததாக பிரதமா் நரேந்திர மோடி தெரிவித்தார்.