முகப்பு
இந்தியா

பாஜக சொல்வதை அதிகாரிகள் செய்கிறார்கள்! என் கட்சியினர் மீது சிஆர்பிஎஃப் தாக்குதல்! மமதா

தேர்தல் அதிகாரிகள், சிஆர்பிஎஃப் படையினர் மீது மேற்கு வங்க முதல்வர் மமதா குற்றச்சாட்டு...

Updated On : 29 ஏப்ரல், 2026 at 11:12 AM
கோப்புப் படம் - IANS
பகிர்:

பாஜக சொல்வதை தேர்தல் அதிகாரிகள் செய்வதாக மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி குற்றம்சாட்டியுள்ளார்.

294 சட்டப்பேரவைத் தொகுதிகளைக் கொண்ட மேற்கு வங்கத்தில் முதல்கட்டமாக 152 தொகுதிகளுக்கு கடந்த ஏப். 23 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்ற நிலையில் இன்று(ஏப். 29) 142 தொகுதிகளுக்கு இரண்டாம் மற்றும் இறுதிக்கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி போட்டியிடும் பவானிபூர் தொகுதிக்கு இன்றுதான் வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

Advertisement

இந்நிலையில் தேர்தல் ஆணையம், சிஆர்பிஎப் படையினர், பாஜகவினர் மீது மமதா பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார்.

"எனது கட்சியும் நானும் வாக்குப்பதிவு அமைதியாக நடைபெற வேண்டும் என்று விரும்புகிறோம். இருப்பினும் மேற்கு வங்கம் பற்றிய புரிதல் இல்லாத தேர்தல் அதிகாரிகள் பலர் இங்கு வரவழைக்கப்பட்டுள்ளனர். நேற்று ஒரு அதிகாரி மேற்கு வங்கம் முழுவதும் குழப்பத்தை ஏற்படுத்தினார். நான் இரவு முழுவதும் கண் விழித்திருந்தேன். திரிணமூல் காங்கிரஸ் முகவர்கள் அனைவரையும் கைது செய்ய வேண்டும் என்று கூறிக்கொண்டு, அவர் காவல்துறைக்கு அழுத்தம் கொடுக்கிறார். திரிணமூல் காங்கிரஸை குறிவைக்கிறார்கள். இன்று காலையில் எனது கட்சியின் இளைஞரணித் தலைவர் கைது செய்யப்பட்ட்டுள்ளார். அதனால்தான், நான் சேத்லா பகுதிக்குச் சென்றேன். நான் காவல் நிலையத்திற்குச் செல்லவில்லை. எனது கட்சித் தொண்டர் ஒருவரே அங்கு சென்றார்.

நேற்று நள்ளிரவு சுமார் 2 மணியளவில் மத்திய ரிசர்வ் காவல் படையைச் சேர்ந்த 'குண்டர்கள்', மன்னிக்கவும், சிஆர்பிஎஃப் படையினர், உள்ளூர் காவல்துறையினரின் அனுமதியின்றி எனது தொகுதி 70-வது வார்டு கவுன்சிலரின் வீட்டிற்குச் சென்று தாக்குதல் நடத்தினர். அப்போது அவரது மனைவி குழந்தைகளுடன் வீட்டில் தனியாக இருந்தார். அவர் வீட்டில் இல்லை என்று கூறியபோதும், ​​அந்த சிஆர்பிஎஃப் படையினர் அவர்களை காலால் எட்டி உதைத்தனர். அவர்களிடமிருந்த போனையும் பறித்துக்கொண்டனர். அவர் எந்தவொரு கட்சிப் பணியிலும் ஈடுபடக்கூடாது என்றும் எச்சரித்தனர். இதற்கான ஆதாரத்தை என்னால் காட்ட முடியும்" என்று கூறினர்.

summary

Observers from outside doing what BJP says: Mamata Banerjee slams EC officials, CRPF

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.