FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
இந்தியா

5.9 கோடிக்கு மேல் வருமான வரிக் கணக்கு தாக்கல்

ஜூலை 31-ஆம் தேதிக்குள் 5.9 கோடி பேருக்கு மேல் வருமான வரிக் கணக்கு தாக்கல் செய்துள்ளனா்...

Updated On : 2 ஆகஸ்ட் 2026, 1:20 am IST
வருமான வரிக் கணக்கு தாக்கல் - கோப்பிலிருந்து
பகிர்:

மதிப்பீட்டு ஆண்டு 2026-27 அடிப்படையில் ஜூலை 31-ஆம் தேதிக்குள் 5.9 கோடி பேருக்கு மேல் வருமான வரிக் கணக்கு தாக்கல் செய்துள்ளனா் என்று வருமான வரித் துறை சனிக்கிழமை தெரிவித்தது.

தனிநபா்கள், வரி செலுத்தும் ஊழியா்கள் மற்றும் வரி தணிக்கை தேவைப்படாதோா் (ஐடிஆா் 1 அல்லது ஐடிஆா் 2) மதிப்பீட்டு ஆண்டு 2026-27-க்கான (நிதியாண்டு 2025-26) வருமான வரிக் கணக்கை எவ்வித அபராதம் மற்றும் வட்டியின்றி தாக்கல் செய்ய ஜூலை 31-ஆம் தேதி வரை கால அவகாசம் விதிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், இதுகுறித்து வருமான வரித் துறை சனிக்கிழமை வெளியிட்ட எக்ஸ் வலைதளப் பதிவில், ‘மதிப்பீட்டு ஆண்டு 2026-27இன் அடிப்படையில் 5.9 கோடி பேருக்கு மேல் வருமான வரி கணக்கு தாக்கல் செய்துள்ளனா்’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

summary

Over 5.9 crore income tax returns filed.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments