ஒரு நபருக்கு 9 சிம் கார்டுகள் மட்டுமே அனுமதி! விதிகளை கடுமையாக்கிய மத்திய அரசு!
ஜம்மு - காஷ்மீர், அஸ்ஸாம் மற்றும் வடகிழக்கு மாநிலங்களில் அதிகபட்சமாக 6 சிம் கார்டுகளுக்கு மட்டுமே அனுமதி...
இந்தியாவில் தனிநபர் ஒருவர் தனது பெயரில் அல்லது ஒரு அடையாள ஆவணத்தின் கீழ் அதிகபட்சமாக 9 சிம் கார்டுகள் மட்டுமே வைத்திருக்க அரசு அனுமதி அளித்துள்ளது.
ஜம்மு-காஷ்மீர், அஸ்ஸாம் மற்றும் வடகிழக்கு மாநிலங்களில் அதிகபட்சமாக 6 சிம் கார்டுகள் வைத்திருக்க மட்டுமே அனுமதிக்கப்பட்டுள்ளது.
சைபர் மோசடி, டிஜிட்டல் அரெஸ்ட் போன்றவற்றை தடுக்க சிம்கார்டுகள் வாங்குவதற்கான விதிமுறைகளை மத்திய அரசு கடுமையாக்கி உள்ளது.
Advertisement
Advertisement
இதன்படி, தனி நபர் அதிகபட்சம் 9 சிம்கார்டுகளை வைத்திருக்கலாம் என்றும் ஜம்மு - காஷ்மீர் மற்றும் வடகிழக்கு பகுதியைச் சேர்ந்தவர்களுக்கு அதிகபட்சம் 6 சிம் கார்டுகள் அனுமதிக்கப்படும் எனவும் அறிவித்துள்ளது.
புதிய தொலைத்தொடர்பு விதிகளின்படி, அனுமதியை மீறி சிம் பெறுவோருக்கு ரூ. 50,000 முதல் ரூ 2 லட்சம் வரை அபராதம் விதிக்கப்படலாம் என்றும் மோசடி வழக்குகளில் சிறை தண்டனையும் விதிக்கப்படலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உங்கள் ஆதார் எண்ணில் எத்தனை சிம் கார்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன என்பதை அறிய சஞ்சார் சாதி போர்ட்டல் (Sanchar Saathi Portal) என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தைப் பயன்படுத்தலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Only 9 SIM cards allowed per person! Central Government tightens rules
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.