FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

இந்தியாவிலிருந்து 37.5 டன் நிவாரணம்! நேபாளம் புறப்பட்டது 2-வது விமானம்!

இந்தியாவிலிருந்து நேபாளத்துக்கு 37.5 டன் நிவாரணம் அனுப்பப்பட்டது பற்றி...

3 வினாடிகள் முன்பு
இந்தியாவிலிருந்து நேபாளம் புறப்பட்டது 2-வது விமானம் - Dr S Jaishankar/X
பகிர்:

இந்தியாவிலிருந்து 37.5 டன் நிவாரணப் பொருள்களுடன் இந்திய விமானப் படையின் இரண்டாவது விமானம் வியாழக்கிழமை காலை நேபாளம் புறப்பட்டுச் சென்றது.

நேபாளத்தின் வடக்கு ராசுவா பகுதியில் நேற்று (ஆக. 26) காலை கோஷி ஆற்றில் ஏற்பட்ட திடீர் பெருவெள்ளத்தில் ஆயிரக்கணக்கானோர் அடித்துச் செல்லப்பட்டனர். இதுவரை 157 பேர் சடலமாக மீட்கப்பட்டன.

இந்தியாவிலிருந்து கைலாச யாத்திரை சென்றவர்கள் உள்பட 300-க்கும் அதிகமானோர் மாயமாகியிருப்பதாகவும், அவர்களை தொடர்பு கொள்ள முடியவில்லை என்றும் நேபாள அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

Advertisement

Advertisement

இந்த நிலையில், நேபாளத்தில் ஏற்பட்ட பேரிடருக்கு ஆதரவு தரும் வகையில், மருந்துகள் மற்றும் அத்தியாவசியப் பொருள்கள் உள்ளிட்ட 10 டன் பொருள்கள் நேற்று மாலை இந்திய விமானப் படை விமானம் மூலம் அனுப்பப்பட்டது.

தற்போது இரண்டாவது விமானத்தில் மேலும் 37.5 டன் மருந்துகள் மற்றும் அத்தியாவசியப் பொருள்கள் அனுப்பப்பட்டுள்ளதாக மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.

summary

37.5 tonnes of relief aid from India! Second flight departs for Nepal!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments