FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

மணிப்பூரில் துப்பாக்கிச் சூடு: 2 கிராமவாசிகள் பலி

மணிப்பூரில் நிகழ்ந்த துப்பாக்கிச்சூட்டில் 2 பேர் பலியாகியிருப்பது பற்றி.....

மணிப்பூர்.
பகிர்:

மணிப்பூரில் சந்தேகத்திற்குரிய தீவிரவாதிகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் இரண்டு கிராமவாசிகள் பலியாகினர்.

மணிப்பூர் மாநிலம், காங்போக்பி மாவட்டத்தில் திங்கள்கிழமை காலையில் சந்தேகத்திற்குரிய தீவிரவாதிகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் இரண்டு கிராமவாசிகள் பலியானதோடு ஒருவர் காயமடைந்தார் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். பலியானவர்கள் 35 வயதான லாம்டின்தாங் மற்றும் நெய்சின் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

அதேசமயம் இந்த துப்பாக்கிச் சூட்டில் செய்லூன் (65) என்பவர் காயமடைந்தார். சூழ்நிலையைக் கட்டுக்குள் கொண்டுவர பாதுகாப்புப் படையினர் அந்தப் பகுதிக்கு விரைந்து அனுப்பப்பட்டு வருகின்றனர். துப்பாக்கிச் சூடு காரணமாக பல கிராமவாசிகள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறி அருகில் உள்ள காடுகளில் தஞ்சம் அடைய வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டனர் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

Advertisement

Advertisement

மேலும் மலையோரக் கிராமத்தில் இரு சமூகங்களைச் சேர்ந்த ஆயுதமேந்திய குழுக்களுக்கு இடையே கடுமையான துப்பாக்கிச் சண்டை நடைபெற்று வருவதாகவும் அவர்கள் கூறினர். மாவட்ட அதிகாரி கூறுகையில், டி வைசோங் உட்பிரிவுக்கு உட்பட்ட குகி இன மக்கள் வாழும் என் தேய்காங் கிராமத்தில் அதிநவீன ஆயுதங்களைப் பயன்படுத்தி ஆயுதமேந்திய நபர்கள் கண்மூடித்தனமாக துப்பாக்கிச் சூடு நடத்தினர்.

இதில் இரண்டு பேர் பலியாகினர். பல வீடுகளும் தீக்கிரையாக்கப்பட்டன. இந்தத் தாக்குதல் காலை 9.30 மணியளவில் நடைபெற்றது என்று தெரிவித்தார். பிப்ரவரி மாதம் மாநிலத்தில் நாகா மற்றும் குகி சமூகத்தினரிடையே வன்முறை வெடித்ததில் இருந்து, தனித்தனி துப்பாக்கிச் சூடு சம்பவங்களில் 20-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர் மற்றும் பல வீடுகள் தீக்கிரையாக்கப்பட்டுள்ளன.

summary

Two villagers were killed and another injured in a gun attack by suspected militants in Manipur's Kangpokpi district on Monday morning, officials said.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments