பிரான்ஸ் அதிபர் இமானுவல் மேக்ரான் மும்பை சாலையில், தனது பாதுகாவலர்களுடன் நடைப்பயிற்சி மேற்கொண்ட விடியோ இணையத்தில் பலரால் பகிரப்பட்டு வருகிறது.
நடைப்பயிற்சியுடன் இன்றைய பொழுதைத் தொடங்கிய இமானுவல் மேக்ரான், பிறகு தனது மனைவி பிரிகேட் மேக்ரானுடன் 2008 நவம்பர் மும்பை தாக்குதலில் கொல்லப்பட்டோருக்கு அஞ்சலி செலுத்தினர்.
இந்தியா சாா்பில் நடத்தப்படும் செயற்கை நுண்ணறிவு (ஏஐ) தாக்க உச்சி மாநாடு 2026-இல் பங்கேற்பதற்காக பிரதமா் நரேந்திர மோடி விடுத்த அழைப்பின்பேரில் இமானுவல் மேக்ரான் மூன்று நாள் பயணமாக (பிப். 17 - 19) இந்தியா வருகைப் புரிந்துள்ளார்.
இந்தப் பயணத்தின் ஒரு பகுதியாக பிரதமர் நரேந்திர மோடியை பிரான்ஸ் அதிபர் சந்திக்கவுள்ளார்.
பின்னா், மாலை 5.15 மணிக்கு இரு தலைவா்களும் மும்பையில் நடைபெறும் ‘இந்தியா-பிரான்ஸ் புத்தாக்க ஆண்டு 2026’ வா்த்தக மாநாட்டைத் தொடங்கிவைத்து, இரு நாடுகளைச் சோ்ந்த தொழில்நிறுவனத் தலைவா்கள், புத்தாக்க நிறுவனா்கள், ஆராய்ச்சியாளா்கள் மத்தியில் உரையாற்ற உள்ளனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.