சித்திரிப்பு
இந்தியா

கோயில் நிலத்தில் தொழுகை நடத்தியதாக முஸ்லிம் முதியவர் மீது தாக்குதல்!

உத்தரகாண்டில் கோயில் நிலத்தில் தொழுகை நடத்தியதாக முஸ்லிம் முதியவர் மீது இந்து அமைப்பினர் தாக்குதல் நடத்தியதால் பரபரப்பு

இணையதளச் செய்திப் பிரிவு

உத்தரகாண்டில் கோயில் நிலத்தில் தொழுகை நடத்தியதாக முஸ்லிம் முதியவர் மீது இந்து அமைப்பினர் தாக்குதல் நடத்தியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரகாண்டின் ரேஷம் பாரி பகுதியில் அத்ரியா கோயில் அருகே ஷாஹித் என்பவர் பல நாள்களாக வேலை செய்து வந்தார். இந்த நிலையில், ரமலான் மாதத்தையொட்டி, கோயிலுக்கு அருகே இருந்த கோயிலுக்குச் சொந்தமான நிலத்தில் தொழுகை செய்தார்.

கோயில் நிலத்தில் ஷாஹித் தொழுகை நடத்தியதையறிந்த சிலர், அவர் மீது ஒரு கும்பல் தடிகளால் தாக்குதல் நடத்தினர். மேலும், ஷாஹித்தை இந்து மத கோஷமிடவும் வற்புறுத்தியுள்ளனர்.

இந்த சம்பவத்தினைத் தொடர்ந்து, ஷாஹித்துடன் முஸ்லிம் அமைப்பினர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

ஷாஹித் மீது தாக்குதல் நடத்தியவர்களில் ஒருவர் பரோலில் வெளிவந்த கொலைக் குற்றவாளி என்பதும் பின்னர் தெரிய வந்தது.

இதனிடையே, கோயில் நிலத்தில் வேறு எந்த மதம் தொடர்பான நடவடிக்கைகளும் பொறுத்துக்கொள்ளப்பட மாட்டாது என்று கோயில் மேலாளர் அரவிந்த் சர்மா கூறினார்.

இதனைத் தொடர்ந்து, இரு சமூகத்தினரையும் அமைதி காக்குமாறு போலீஸார் கேட்டுக் கொண்டனர். மேலும், புகாரின் அடிப்படையில் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறினர்.

Elderly Muslim man assaulted for offering namaz on vacant land near temple in Uttarakhand

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

உள்ளாட்சி அதிகாரப் பகிர்வில் திமுகவுக்கு பிரச்னை இல்லை! காங்கிரஸ் நிர்வாகி

சென்னை புறநகர் ரயில்கள் ரத்து: மார்ச் 2-க்குள் தீர்வு என தெற்கு ரயில்வே தகவல்!

ஓடிடியில் வித் லவ் எப்போது?

தயாரிப்பாளராகும் பிரதீப் ரங்கநாதன்?

திமுக ஓர் அரசியல் இயந்திரம்; அதிமுக, தவெகவை புறக்கணிக்க முடியாது: காங்கிரஸ் எம்.பி.

SCROLL FOR NEXT