முகப்பு
இந்தியா

இந்தியா - பாக். போரில் நான் இல்லையென்றால் 3.5 கோடி மக்கள் இறந்திருப்பர்: டிரம்ப்

இந்தியா - பாகிஸ்தான் போரில் தலையிடாமல் இருந்திருந்தால், 35 மில்லியன் மக்கள் இறந்திருக்கக் கூடும் என்று டிரம்ப் பேச்சு

Updated On : 25 பிப்ரவரி, 2026 at 4:57 AM
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்
பகிர்:

இந்தியா - பாகிஸ்தான் போரை நிறுத்தாமலிருந்திருந்தால், 35 மில்லியன் மக்கள் இறந்திருக்கக் கூடும் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் பேசியுள்ளார்.

அமெரிக்காவின் வெள்ளை மாளிகையில் அதிபர் டிரம்ப் பேசுகையில், "உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் உள்ள அமெரிக்கர்களின் பாதுகாப்பை நாங்கள் பெருமையுடன் மீட்டெடுத்து வருகிறோம். எனது முதல் 10 மாத பதவிக்காலத்தில் 8 போர்களை நிறுத்தியுள்ளேன்.

இந்தியாவும் பாகிஸ்தானும் அணு ஆயுதப் போரை நடத்தியிருக்கும். இந்தியா - பாகிஸ்தான் போரில் என்னுடைய தலையீடு இல்லாமலிருந்திருந்தால், 35 மில்லியன் மக்கள் இறந்திருப்பர் என்று பாகிஸ்தான் பிரதமர் ஷாபாஸ் ஷெரீஃப் கூறினார்.

ஒன்பதாவது போரை முடிவுக்குக் கொண்டுவர எனது நிர்வாகம் மிகவும் கடினமாக உழைத்து வருகிறது.

ரஷியா - உக்ரைன் இடையிலான படுகொலை, நான் அதிபராக இருந்திருந்தால் ஒருபோதும் நடந்திருக்காது" என்று தெரிவித்தார்.

இந்தியா - பாகிஸ்தான் போரை நிறுத்தியதாக டிரம்ப் சுமார் 80-க்கும் அதிகமான முறை கூறிவிட்டார். இருப்பினும், டிரம்ப்பின் பேச்சை மத்திய அரசு தொடர்ந்து மறுத்து வருகிறது. இருநாடுகளிடையேயான நேரடிப் பேச்சுவார்த்தை மூலமே போர் நிறுத்தப்பட்டதாக மத்திய அரசு கூறுகிறது.

இருப்பினும், இந்தியா - பாகிஸ்தான் போரை நிறுத்தியதாக டிரம்ப் தொடர்ந்து பெருமை பேசிக் கொண்டிருக்கிறார்.

summary

Pakistan PM Shehbaz Sharif Said 35 Million Would Have Died If It Weren't For Me: US President Trump

முழு கட்டுரையைப் படிக்க →