FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
இந்தியா

இளைஞர்களிடம் குறிப்பாக பெண்களிடம் மன்னிப்பு கேட்கிறேன்! அபிஜீத் தீப்கே

போராட்டத்தில் தாக்குதல் அடைந்தவர்களிடம் மன்னிப்பு கேட்பதாக சிஜேபி கட்சியின் நிறுவனர் அபிஜீத் தீப்கே பதிவு...

Updated On : 21 ஜூலை 2026, 10:06 am IST
அபிஜீத் தீப்கே (கோப்புப் படம்) - ENS
பகிர்:

தில்லியில் நடந்த சிஜேபி கட்சிப் போராட்டத்தில் மாணவர்கள் மீது தில்லி காவல்துறை நடத்திய தாக்குதலுக்கு அந்த கட்சியின் நிறுவனர் அபிஜீத் தீப்கே மன்னிப்பு கோரியுள்ளார்.

இதுபற்றி அவர் தனது எக்ஸ் பக்கத்தில்,

"எங்களுடைய ஆதரவாளர்கள் அனைவரிடமும், குறிப்பாக ஆண் காவலர்களால் கொடூரமாகத் தாக்கப்பட்ட அந்தப் பெண்களிடமும் நான் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்.

Advertisement

Advertisement

நாங்கள் இன்னும் சிறப்பாகச் செயல்பட்டிருக்கலாம். தில்லி காவல்துறையின் மனிதாபிமானமற்ற நடவடிக்கைகளிலிருந்து உங்களைப் பாதுகாக்க நான் இன்னும் சிறப்பாகச் செயல்பட்டிருக்கலாம்.

20-க்கும் மேற்பட்ட மாணவர்களின் உயிரிழப்புக்குக் காரணமான தர்மேந்திர பிரதான் ஒருவரைக் காப்பாற்றுவதற்காக மேலும் பல இளம் மாணவர்களின் ரத்தம் சிந்தவைக்க அரசு நினைக்கிறது.

தாக்குதலில் காயமடைந்தவர்கள் யாரேனும் இதைப் பார்த்தால் தயவுசெய்து எனக்குத் தனிப்பட்ட செய்தி அனுப்புங்கள். நான் உங்களிடம் நேரில் பேசி மன்னிப்பு கேட்க விரும்புகிறேன்.

உங்கள் அனைவருக்காகவும் நாங்கள் தொடர்ந்து போராடுவோம்" என்று குறிப்பிட்டுள்ளார்.

summary

I apologize to the youth, especially to the women: Abhijeet Dipke

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments