கர்நாடகத்தின் புதிய துணை முதல்வர் யார்? காங்கிரஸ் கட்சிக்குள் மீண்டும் போட்டி!
கர்நாடகத்தின் துணை முதல்வர் பதவிக்கு காங்கிரஸ் சட்டப்பேரவை உறுப்பினர்கள் இடையே கடுமையான போட்டி...
கர்நாடகத்தில், துணை முதல்வர் பதவிக்கு காங்கிரஸ் மூத்த தலைவர்கள் இடையே கடும் போட்டி நிலவி வருகிறது.
கர்நாடகத்தில், சித்தராமையா முதல்வர் பதவியை ராஜிநாமா செய்ததைத் தொடர்ந்து துணை முதல்வரான காங்கிரஸ் மூத்த தலைவர் டி.கே. சிவகுமார் வரும் ஜூன் 3 ஆம் தேதி முதல்வராகப் பதவியேற்கிறார்.
இதனைத் தொடர்ந்து, புதியதாக அமையவுள்ள டி.கே. சிவகுமார் தலைமையிலான அமைச்சரவையில் இடம்பிடிப்பது மட்டுமின்றி துணை முதல்வர் பதவிக்கும் காங்கிரஸ் சட்டப்பேரவை உறுப்பினர்கள் இடையே கடுமையான போட்டி நிலவி வருகிறது.
Advertisement
Advertisement
இதில், கர்நாடகத்தின் துணை முதல்வர் பதவிக்கு காங்கிரஸ் மூத்த தலைவர்களான கே.ஹெச். முனியப்பா, ஜி. பரமேஸ்வரா, ஷிவானந்த் பாட்டில், பிரியங்க் கார்கே, ஈஸ்வர் காந்த்ரே, ஹெ.சி. மஹாதேவப்பா, சதீஷ் ஜார்கிஹோலி, எம்.பி. பாட்டில் மற்றும் சித்தராமையாவின் மகன் யதீந்திரா இடையே கடுமையான போட்டி நிலவுகிறது.
இதனைத் தொடர்ந்து, துணை முதல்வர் பதவிக்குப் போட்டியிடும் காங்கிரஸ் தலைவர்களின் ஆதரவாளர்கள் தங்களின் பலத்தை வெளிகாட்டும் முனைப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதில், கர்நாடக மற்றும் மத்திய அமைச்சராகப் பதவி வகித்துள்ள முனியப்பாவுக்கு துணை முதல்வர் பதவி வழங்கக் கோரி அவரின் ஆதரவாளர்கள் செவ்வாய்க்கிழமை (ஜூன் 2) காலை அவரின் உருவப் படங்களை ஏந்தியபடி பெங்களூருவில் பேரணி நடத்தினர்.
இதேபோல், சித்தராமையாவின் மகன் யதீந்திராவின் ஆதரவாளர்கள் மைசூருவில் உள்ள ராமசாமி சர்கிள் பகுதியில் பேரணி நடத்தியுள்ளனர்.
மேலும், துணை முதல்வர் பதவிக்கோரி மஹாதேவப்பா, பிரியங்க் கார்கே, ஈஸ்வர் காந்த்ரே மற்றும் எம்.பி. பாட்டில் ஆகியோரின் ஆதரவாளர்களும் பேரணி, வழிபாடு உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளை முன்னெடுத்துள்ளனர்.