முகப்பு
இந்தியா

தில்லியில் வெப்பநிலை 42 டிகிரி செல்சியஸை எட்டும் என ஐஎம்டி கணிப்பு!

நாட்டில் கோடை வெப்பத்தின் தாக்கம் கடந்த சில நாள்களாகத் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

Updated On : 7 ஜூன் 2026, 8:51 pm IST
பகிர்:

புதுதில்லி: நாட்டில் கோடை வெப்பத்தின் தாக்கம் கடந்த சில நாள்களாகத் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அதீத வெப்பத்தால் பல்வேறு மாநிலங்களும் பாதிக்கப்பட்டுள்ளன. அதே வேளையில், நாட்டின் பல பகுதிகளில் வெப்பநிலை தொடர்ந்து அதிகரித்து வருகின்றது.

இந்தநிலையில், இந்திய வானிலை ஆய்வு மையத்தின் தரவுகளின் அடிப்படையில், தில்லியில் இன்று அதிகபட்ச வெப்பநிலை 41.6 டிகிரி செல்சியஸாகப் பதிவானது. இது சராசரியை விட 1.6 டிகிரி அதிகம். இதுவே குறைந்தபட்ச வெப்பநிலை 27.7 டிகிரி செல்சியஸாகப் பதிவானது. இது சராசரியை விட 0.1 டிகிரி அதிகம்.

நாளை (திங்கள்கிழமை) வானம் பெரும்பாலும் தெளிவாக இருக்கும் என்றும், அதிகபட்ச மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலைகள் முறையே 42 மற்றும் 28 டிகிரி செல்சியஸை எட்டும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

Advertisement

Advertisement

மத்திய மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தின் தரவுகளின் அடிப்படையில், மாலை 4 மணிக்கு காற்றின் தரக் குறியீடு 144 ஆக பதிவாகி, காற்றின் தரம் மிதமான பிரிவில் இருந்தது.

summary

The weather department has predicted maximum and minimum temperatures expected to reach around 42 and 28 degrees Celsius, respectively.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.