தில்லியில் வெப்பநிலை 42 டிகிரி செல்சியஸை எட்டும் என ஐஎம்டி கணிப்பு!
நாட்டில் கோடை வெப்பத்தின் தாக்கம் கடந்த சில நாள்களாகத் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
புதுதில்லி: நாட்டில் கோடை வெப்பத்தின் தாக்கம் கடந்த சில நாள்களாகத் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அதீத வெப்பத்தால் பல்வேறு மாநிலங்களும் பாதிக்கப்பட்டுள்ளன. அதே வேளையில், நாட்டின் பல பகுதிகளில் வெப்பநிலை தொடர்ந்து அதிகரித்து வருகின்றது.
இந்தநிலையில், இந்திய வானிலை ஆய்வு மையத்தின் தரவுகளின் அடிப்படையில், தில்லியில் இன்று அதிகபட்ச வெப்பநிலை 41.6 டிகிரி செல்சியஸாகப் பதிவானது. இது சராசரியை விட 1.6 டிகிரி அதிகம். இதுவே குறைந்தபட்ச வெப்பநிலை 27.7 டிகிரி செல்சியஸாகப் பதிவானது. இது சராசரியை விட 0.1 டிகிரி அதிகம்.
நாளை (திங்கள்கிழமை) வானம் பெரும்பாலும் தெளிவாக இருக்கும் என்றும், அதிகபட்ச மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலைகள் முறையே 42 மற்றும் 28 டிகிரி செல்சியஸை எட்டும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
Advertisement
Advertisement
மத்திய மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தின் தரவுகளின் அடிப்படையில், மாலை 4 மணிக்கு காற்றின் தரக் குறியீடு 144 ஆக பதிவாகி, காற்றின் தரம் மிதமான பிரிவில் இருந்தது.
The weather department has predicted maximum and minimum temperatures expected to reach around 42 and 28 degrees Celsius, respectively.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.