கல்வி அமைச்சர் பதவி விலகும் வரை போராட்டம் தொடரும்! - கரப்பான்பூச்சி மக்கள் கட்சி
மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலகும் வரை போராட்டம் தொடரும் என்று கரப்பான்பூச்சி மக்கள் கட்சி தெரிவித்தது பற்றி...
மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலகும் வரை போராட்டம் தொடரும் என்று கரப்பான்பூச்சி கட்சித் தலைவர் அபிஜீத் தீப்கே ஞாயிற்றுக்கிழமை தெரிவித்துள்ளார்.
தலைமை நீதிபதி ஒருவரின் விமர்சனத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து டிஜிட்டல் கிரியேட்டர் அபிஜீத் தீப்கே என்பவரின் தலைமையில் தொடங்கப்பட்டது கரப்பான்பூச்சி மக்கள் கட்சி. அண்மையில், நீட் தேர்வு வினாத்தாள் கசிவு விவகாரத்தில் மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கையை விடுத்து போராட்டத்தை அறிவித்தனர்.
அதன்படி, போராட்டத்தில் பங்கேற்பதற்பதற்காக அமெரிக்காவிலிருந்து நேற்று இந்தியா வந்தடைந்த அபிஜீத் தீப்கே தில்லியில் உள்ள ஜந்தர் மந்தரில் ஆயிரக்கணக்கான இளைஞர்களின் ஆதரவோடு போராட்டம் நடத்தினார். இளைஞர்கள் ஒன்றுகூடி நடத்திய இந்தப் போராட்டம் அரசியல் களத்தில் பேசுபொருள் ஆகியுள்ளது.
Advertisement
Advertisement
இந்த நிலையில் போராட்டத்தின் அடுத்த கட்டம் குறித்து அபிஜீத் தீப்கே தெரிவித்ததாவது:
ஜந்தர் மந்தரில் 6,000 முதல் 7,000 மக்கள் பங்கேற்ற இந்தப் போராட்டம் வெற்றிகரமாக நடைபெற்று முடிந்தது. இந்தப் போராட்டத்தின் அடுத்த கட்டம் நாடு தழுவிய அளவில் நடைபெறும். தர்மேந்திர பிரதான் பதவி விலகும் வரை நாங்கள் பின்வாங்க மாட்டோம். இதற்கான திட்டத்தை நாங்கள் செயல்படுத்துவோம் என்று தெரிவித்தார்அபிஜீத் தீப்கே.
மேலும், அபிஜீத் தீப்கே இல்லத்துக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.