கரப்பான்பூச்சி கட்சித் தலைவர் இல்லத்துக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்!
கரப்பான்பூச்சி மக்கள் கட்சியின் தலைவர் இல்லத்துக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டது பற்றி...
கரப்பான்பூச்சி மக்கள் கட்சியின் தலைவர் அபிஜீத் தீப்கே இல்லத்துக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டதாக அதிகாரிகள் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தனர்.
தலைமை நீதிபதி ஒருவரின் விமர்சனத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து டிஜிட்டல் கிரியேட்டர் அபிஜீத் தீப்கே என்பவரின் தலைமையில் தொடங்கப்பட்டது கரப்பான்பூச்சி மக்கள் கட்சி. அண்மையில், நீட் தேர்வு வினாத்தாள் கசிவு விவகாரத்தில் மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கையை விடுத்து போராட்டத்தை அறிவித்தனர்.
அதன்படி, போராட்டத்தில் பங்கேற்பதற்பதற்காக அமெரிக்காவிலிருந்து நேற்று இந்தியா வந்தடைந்த அபிஜீத் தீப்கே தில்லியில் உள்ள ஜந்தர் மந்தரில் ஆயிரக்கணக்கான இளைஞர்களின் ஆதரவோடு போராட்டம் நடத்தினார்.
Advertisement
Advertisement
இந்த நிலையில், அபிஜீத் தீப்கே இல்லத்துக்கு கூடுதல் பாதுகாப்பை தில்லி காவல்துறை வழங்கியுள்ளது. இது குறித்து காவல்துறை அதிகாரி தெரிவித்ததாவது:
இன்று முதல் அபிஜீத் தீப்கே இல்லத்துக்கு கூடுதல் பாதுகாப்பு வழங்கப்படுகிறது. இதற்கு முன்பு, 11 காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த நிலையில், தற்போது 15 காவலர்கள் பாதுகாப்பில் ஈடுபட்டுள்ளனர். பணியமர்த்தப்பட்ட காவலர்கள் உள்ளூர் காவல் நிலையம் மற்றும் நகர காவல் தலைமையகம் ஆகிய இரண்டையும் சேர்ந்தவர்கள் என்று தெரிவித்தார்.
Officials stated on Sunday that security arrangements at the residence of 'Cockroach Janata Party' leader Abhijiit Dipke have been stepped up.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.