விசாகப்பட்டினம் எஃகு ஆலை விபத்து: பலி 8-ஆக உயர்வு! பிரதமர் இரங்கல்
விசாகப்பட்டினத்தில் உள்ள எஃகு ஆலையில் உருகிய இரும்பு கொட்டியதில் 8 தொழிலாளர்கள் பலியான சம்பவம் பற்றி...
விசாகப்பட்டினத்தில் உள்ள எஃகு ஆலையில் உருகிய இரும்பு கொட்டியதில் பலியானவர்களின் எண்ணிக்கை 8 ஆக உயர்ந்தது. இந்த விபத்தில் பலியானோர் குடும்பத்துக்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.
ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் உள்ள ராஷ்டிரிய இஸ்பத் நிகாம் லிமிடெட் (விசாகப்பட்டினம் எஃகு ஆலை) தொழிற்சாலையில், கிரேனில் கொண்டு செல்லப்பட்ட தொட்டியிலிருந்து 1,600 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையில் இருந்த உருகிய இரும்பு எதிர்பாராதவிதமாக தொழிலாளர்கள் மீது கொட்டியது. இதில் எட்டு பேர் உயிரிழந்தனர். ஆறு பேர் காயமடைந்துள்ளனர்.
இந்த விபத்து குறித்து பிரதமர் நரேந்திர மோடி பதிவிட்டுள்ளதாவது:
Advertisement
Advertisement
விசாகப்பட்டினம் எஃகு ஆலையில் நிகழ்ந்த விபத்து மிகுந்த வருத்தத்தை அளிக்கிறது. தங்கள் அன்புக்குரியவர்களை இழந்தவர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கல்கள். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன்.
பாதிக்கப்பட்டவர்களுக்கு அதிகாரிகள் அனைத்து விதமான உதவிகளையும் செய்து வருகின்றனர். உயிரிழந்த ஒவ்வொருவரின் குடும்பத்தினருக்கும் பிரதமர் தேசிய நிவாரண நிதியிலிருந்து ரூ. 2 லட்சம் நிவாரணத் தொகை வழங்கப்படும். காயமடைந்தவர்களுக்கு ரூ. 50,000 வழங்கப்படும் என பிரதமர் நரேந்திர மோடி குறிப்பிட்டுள்ளார்.