தில்லி கலவரம்: உமர் காலித், ஷர்ஜீல் இமாம் ஜாமீன் மனு தாக்கல்!
தில்லி கலவர வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளவர்கள் ஜாமீன் மனு தாக்கல் செய்யப்பட்டது பற்றி..
தில்லி கலவர வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள உமா் காலித், ஷா்ஜீல் இமாம் ஆகியோர் தில்லி நீதிமன்றத்தில் புதிய ஜாமீன் மனுக்களைத் தாக்கல் செய்துள்ளனர்.
முந்தைய ஜாமீன் மனுவை உச்ச நீதிமன்றம் ஆறு மாதங்களுக்கு முன்பு தள்ளுபடி செய்திருந்த நிலையில், இந்த வழக்கின் விசாரணையில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் எதுவும் ஏற்படவில்லை என இம்மனுக்களில் வாதிடப்பட்டுள்ளது.
கூடுதல் அமர்வு நீதிபதி சுமேத் சைனி முன்னிலையில் இந்த புதிய மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. நீதிபதி இதுகுறித்து தில்லி காவல்துறையிடம் வெள்ளிக்கிழமை பதில் கோரியதுடன், வழக்கின் விசாரணையை ஜூலை 4-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.
Advertisement
Advertisement
தனது மனுவில், கடந்த 6 ஆண்டுகளாகத் தான் சிறையில் இருப்பதாகவும், ஜனவரி 5 அன்று உச்ச நீதிமன்றம் தனது ஜாமீன் மனுவை நிராகரித்ததைத் தொடர்ந்து இவ்வழக்கில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் எதுவும் ஏற்படவில்லை என்றும் இமாம் குறிப்பிட்டுள்ளார்.