கலால் வரியைக் குறைத்ததன் காரணம் என்ன? நிர்மலா சீதாராமன் விளக்கம்!
பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியைக் குறைத்ததன் காரணத்தை மத்திய நிதியமைச்சர் விளக்கியது குறித்து...
பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியைக் குறைத்ததன் காரணத்தை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் விளக்கியுள்ளார்.
முன்னதாக, டீசல் மீதான கலால் வரி ரூ. 10-ஐ முழுமையாக ரத்து செய்தும், பெட்ரோல் மீதான வரியை லிட்டருக்கு ரூ. 13-ல் இருந்து ரூ. 3 ஆக குறைத்தும் மத்திய நிதியமைச்சகம் அறிவிப்பை வெளியிட்டிருந்தது.
இதுகுறித்து மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறுகையில், "இதுபோன்ற இக்கட்டான சூழ்நிலைகளுக்கு பிரதமர் பதிலளிக்கும் விதமாக இந்த விஷயத்திலும் எல்பிஜி அல்லது எரிபொருள் பற்றாக்குறையால் பொதுமக்கள் பாதிக்கப்படாமல் இருப்பதையும் நுகர்வோருக்கான விலையை உயர்த்தக்கூடாது என்றும் பிரதமர் கூறினார்.
Advertisement
Advertisement
இதனைக் கருத்தில் கொண்டு எண்ணெய் சந்தைப்படுத்தல் நிறுவனங்கள், கச்சா எண்ணெய் வாங்குவதை நிறுத்தாமல் இருப்பதை உறுதி செய்வதற்காக நாங்கள் இந்த முடிவை எடுத்துள்ளோம். இதன்மூலம், நாட்டில் எரிபொருள் பற்றாக்குறை ஏற்படாமல் தவிர்க்கலாம்.
மேலும், நாட்டில் தானியங்கி பரிமாற்ற திரவம் (ஏடிஎஃப்) கிடைப்பதை உறுதி செய்வதற்காக அதன் ஏற்றுமதி மீதான கலால் வரியை உயர்த்தியுள்ளோம்" எனத் தெரிவித்தார்.
Union Finance Minister Nirmala Sitharaman has explained the reason for reducing excise duty on petrol and diesel.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.