அஸ்ஸாம்: சிவசாகர் தொகுதியில் அகில் கோகோய் முன்னிலை!
சிவசாகர் தொகுதியில் ரைஜோர் தளக் கட்சி தலைவர் அகில் கோகோய்
அஸ்ஸாமின் சிவசாகர் சட்டப்பேரவைத் தொகுதியில் சிவசாகர் சட்டப்பேரவைத் தொகுதியில் ரைஜோர் தளக் கட்சியில் தலைவர் அகில் கோகோய், பாஜக போட்டியாளரான குஷால் டோவாரியை விட முன்னிலையில் உள்ளதாகத் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
தற்போது பதவிக்காலம் முடிவடையும் சட்டமன்றத்தில், இத்தொகுதியை அகில் கோகோய் ஒரு சுயேச்சை வேட்பாளராகப் பிரதிநிதித்துவப்படுத்தியிருந்தார்.
வாக்கு எண்ணிக்கை நான்காம் சுற்று முடிவில், ரஜோர் தள தலைவர் அகில் கோகோய் 16,268 வாக்குகளைப் பெற்றுள்ளார். அதேவேளையில், அவரது போட்டியாளர் குஷால் டோவாரி 15,858 வாக்குகள் பெற்றுள்ளார். 410 வித்தியாத்தில் அகில் கோகோய் முன்னிலையில் உள்ளார்.
Advertisement
டிசம்பர் 2019-இல் குடியுரிமைத் திருத்தச் சட்டத்திற்கு எதிரான போராட்டங்களின் போது தேசத்துரோக வழக்கில் கைது செய்யப்பட்ட அகில் கோகோய், சிறையில் இருந்தபடியே 2021 சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.