அஸ்ஸாம்: மஜ்பத் தொகுதியில் அமைச்சர் சரண் போரோ வெற்றி!
போடோலாந்து மக்கள் முன்னணி தலைவர் மஜ்பத் தொகுதியைத் தக்கவைத்துக் கொண்டார்.
அஸ்ஸாம் அமைச்சரவை அமைச்சரும் போடோலாந்து மக்கள் முன்னணி(பிபிஎஃப்) தலைவருமான சரண் போரோ மஜ்பத் தொகுதியில் வெற்றிபெற்று மீண்டும் ஆட்சியைத் தக்கவைத்துக் கொண்டார்.
தேர்தல் ஆணையத் தரவுகளின்படி,
போடோலாந்து தலைவர் சரண் போரோ, ஜார்க்கண்ட் முக்தி மோர்சாவின் சார்பில் போட்டியிட்ட பிரீதி ரேகா பார்லாவை எதிர்த்து போட்டியிட்டார்.
Advertisement
Advertisement
பிபிஎஃப் தலைவரான சரண் போரோ 84,718 வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றார். அதேசமயம் ஜார்க்கண்ட் முக்தி மோர்சாவின் பிரீதி ரேகா 29,172 வாக்குகளை பெற்றார்.
சரண் போரோ 84,718 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். அதேசமயம் இந்திய தேசிய காங்கிரஸ் நாராயண 23,558 பின்னடைவை சந்தித்துள்ளார்.
சட்டப்பேரவைத் தேர்தல்களில் சரண் போரோ பெறும் மூன்றாவது வெற்றி இதுவாகும்.
கடந்த ஆண்டு அக்டோபர் மாதம், இவரது கட்சி பாஜக தலைமையிலான என்டிஏ கூட்டணியில் இணைந்தபோது அமைச்சரவையில் சேர்க்கப்பட்ட இவர், தற்போது பதவியிலிருந்து விலகும் அமைச்சரவையில் பிபிஎஃப் கட்சியின் ஒரே பிரதிநிதியாக இடம்பெற்றிருந்தார்.
Assam cabinet Minister and BPF leader Charan Boro retained his Mazbat constituency, defeating the nearest JMM rival by over 55,000 votes, according to Election Commission data.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.